ஆர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், படம் பற்றிய தகவல்களைவிட அதிகமாக, அப்பட நாயகிக்கும் ஆர்யாவிற்கும் காதல் என கிசுகிசுக்கள் வரத் தொடங்கி விடும்.
' வேட்டை' படத்தில் ஆர்யாவிற்கு நாயகியாக நடித்த அமலாவிற்கும் இவரும் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆர்யா தன் வீட்டில் தனது நண்பர்களுக்கும் CCLல் போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கும் விருந்து அளித்தார்.
அவ்விருந்தில் அமலா கலந்து கொள்ளவில்லை. பிரபுதேவா பிரிவிற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த நயன் இதில் கலந்து கொண்டார்.
உடனே அமலாபாலை உதறிவிட்டு நயனுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் ஆர்யா என கோலிவுட் கிசுகிசுத்தது. இதற்கு அமலா " ஆர்யாவுக்கும் எனக்கும் நட்பு தொடர்கிறது. அவரோடு நான் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆர்யா வீட்டில் விருந்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதனால்தான் அதில் பங்கேற்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.
இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது " என்னுடன் நடிக்கும் நாயகிகள் அனைவருடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. பூஜா தொடங்கி இப்போது அமலா பால் வரை என்னை இணைத்து கிசுகிசு வருகிறது.
எனக்கு அனைவருமே நண்பர்கள் தான். நான் மிகவும் ஜாலியான் ஆள். அனைவருமே எனக்கு ஒன்று தான். ஒருவர் மட்டும் மிகவும் நெருக்கம் என்று என்னால் தனித்தனியாக பிரிக்க முடியாது.
என்னுடைய திருமணம் அனைவருக்கும் தெரிந்து தான் நடக்கும். " என்று தெரிவித்து இருக்கிறார்.
'கொசுறு' கபாலி : "பட், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு! "
தஞ்சை குமணன்
நன்றி விகடன் டாட் காம்
5 comments:
தம்பி, என்ன ஒரே பூவா கொட்டுது.
Adhu poo ella leaf. kannu nalla techi par ella kannu kugudagabodhu
ஆரூர் மூனா செந்தில்
தம்பி, என்ன ஒரே பூவா கொட்டுது//////
ஆர்யாவின் பூவுதிர் காலம் அதனாலதான்....
எதையாவது கிளப்பி விட்டு ஆதாயம் பார்கோணும் அம்புட்டுதேன்
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
எனக்கும் நட்பு தொடர்கிறது.
Post a Comment