Followers

Saturday 3 January 2015

ஆரூர் மூனா - கடுப்பேத்திய ஆன்மீக பயணம்

உள்ளே போனால் அர்ச்சனை செய்யும் அய்யர் பூஜை முடித்ததும் கூச்சமேயில்லாமல் தட்சணை கொடுங்கள் என்று வாய் விட்டு கேட்கிறான். பிச்சையா என்று கேட்டேன். எங்கப்பா என்னை தள்ளிக் கொண்டு வெளியில் வந்தார். தலையில் அடித்துக் கொண்டு உனக்கு அறிவேயில்லையா, அது இதுன்னு திட்ட ஆரம்பித்து விட்டார்.

வாயை மூடிக்கிட்டு வண்டியை எடுத்தேன். அடுத்ததா போனது காளஹஸ்தீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கிறது கோயில். ஆயிரம் ஆண்டு பழமையான கோயில். ஆன்மீகவாதிகளுக்கு ஒரு தகவல். திருப்பதிக்கு அருகில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான கோயிலாம் அது. அங்கு செய்யப்படும் பரிகாரங்களுக்கு இணையாக இங்கும் செய்யப்படுகிறது.


No comments:

Post a Comment