ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்,மேட்ச் பிக்சிங் எனப்ப்டும் போட்டி நிர்ணயத்துக்காக இலங்கை வீரருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று ஆட்ட நிர்ணயக்காரர் ஒருவர் சாட்சியமளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர் தனது சாட்சியத்தில்,சில இந்திய வீரர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் தொடர்பாக, மலாட் என்று அழைக்கப்படும் சோனு யோகேந்திரா ஜலான் என்பவரும் பஹாஜி என்றழைக்கப்படும் தேவேந்திரா கோத்தாரி என்பவரும் கடந்த 17 ம் தேதியன்று மும்பையில் வைத்து குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சர்வதேச ரீதியில் மேட்ச் பிக்சிங்சதியில் ஈடுபடுகின்றவர்கள் என்று நம்பப்படுகிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி சோனு என்ற கிரிக்கட் போட்டி நிர்ணயக்காரர், தமது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம், மாதம் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வருமானமாக பெறுவதாக தெரியவந்துள்ளது.
இவருக்கு ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,தென்னாப்ரிக்கா, சவூதி அரேபியா மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக தகவ்ல்கள் கூறுகின்றன.
நன்றி : விகடன்.காம்
தஞ்சை குமணன்