Followers

Saturday 15 February 2014

திருச்சியின் தேவதையே எனக்கான சுந்தரியே

அன்புள்ளம் கொண்ட மக்களே,
 நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு. என்னவளுக்காக.

திருச்சியில் வாழும் மனதிற்கினிய மங்கையே
என் வாழ்வின் கங்கையே
மனமெல்லாம் பொங்கியே
உனக்காக மட்டும் சொல்கிறேன் இங்கயே
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்


"தாவணியில் தேவதையாய்
கண்ணுக்கு தோன்றியதால்
தினம் அவளை காணவேண்டி
வேட்டியும் விபூதி பட்டையுமாய்
சாயரட்சை வேளையில்
பெரிய கோவிலில் காத்திருந்தேன்


தோழியுடன் வந்தமரும் அவளை
தரிசனம் செய்ய வேண்டி
எப்பொழுதும் பின்வரிசை
இடத்தினிலே நிரந்தரமாய்
நின்றிருந்தேன் ஒத்தையிலே

கண்கள் மெல்ல மூடி
மெல்லியதாய் மந்திரத்தை
மனமுருகி வேண்டிக் கொண்டே
பிரார்த்திக்கும் அவள் முகத்தை
காண கண் கோடி வேண்டும்"

என்று உனை நினைத்து காதலும் கசிந்துருக
கவிதை தான் பாடிடவே ஏங்குதே என் மனமே

கரம்பிடிக்கும் நாளை எண்ணி காத்திருக்கேன்
கிளிபோலே
அந்த நாளை நினைத்து மனது ஆர்பரிக்கிறது
அலைபோலே

தஞ்சை குமணன்