Followers

Sunday 11 November 2012

INNUM NIRANDHARA VELAI KIDAIKALAI


Monday 13 August 2012

அனிருத் ஆன்ட்ரியாவின் சூடான முத்தம்




எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்..........

Monday 6 August 2012

மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!


 
        சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு...! எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை...? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை...? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது...? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை...? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.  இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது.

    மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார்.  அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது.  அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது, அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி.

    இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.  இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது.

      அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.  அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது.  தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை  பயன்படுத்திக் கொண்டனர்.  சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர்.

      இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.  சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது.  ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த,
ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள்.


      ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.  போரினால் கடும் பஞ்சம் வேறு.  உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம்.  ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


      இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர்.  ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர்.  அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன.   நம் பாடு தான் திண்டாட்டம்.


   வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன.  எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது.


      இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவுஉண்மை என உணரமுடிகிறது.

      அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர் அதனூடே ஒரு மெல்லிய காதல்
கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..


      மரவள்ளிக்கிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின்உணவு.  உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை.


    ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான்.


    அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம்.  எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம்.
 

    மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள்.  எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

    ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுபூர்வமாக அந்த நூலில் விபரித்துள்ளார்.



தஞ்சை குமணன்

Thursday 5 July 2012

சஞ்சய் தத் தமிழில் நடிக்கிறார்


ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்கள் ஆகும் வரிசையில் ரவி.கே.சந்திரன் தன்னையும் இணைத்துள்ளார்.

தனது முதல் படத்தின் நாயகனாக ஜீவாவை தேர்வு செய்து இருக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இப்படத்தினை 'கோ', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த R.S.Infotainment நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகக் இருக்கிறார் சஞ்சய் தத். ஏதோ இரண்டு அல்லது மூன்று காட்சிக்கு வருவார் என்றில்லாமல்,  படம் முழுக்க வருவது போன்ற ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்திய திரையுலகின் முக்கிய ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் என்பதால் உடனே ஒ.கே கூறி விட்டாராம் சஞ்சய் தத். 

நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


நன்றி விகடன் டாட் காம்

தஞ்சை குமணன்

Saturday 19 May 2012

ஐபிஎல் மேட்ச் பிக்சிங்:இலங்கை வீரருக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டது?


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்,மேட்ச் பிக்சிங் எனப்ப்டும் போட்டி  நிர்ணயத்துக்காக இலங்கை வீரருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று ஆட்ட  நிர்ணயக்காரர் ஒருவர் சாட்சியமளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் அவர் தனது சாட்சியத்தில்,சில இந்திய வீரர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக   குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் தொடர்பாக, மலாட் என்று அழைக்கப்படும் சோனு யோகேந்திரா  ஜலான் என்பவரும் பஹாஜி என்றழைக்கப்படும் தேவேந்திரா கோத்தாரி என்பவரும் கடந்த  17 ம் தேதியன்று மும்பையில் வைத்து குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது  செய்யப்பட்டனர்.

இவர்கள் சர்வதேச ரீதியில் மேட்ச் பிக்சிங்சதியில் ஈடுபடுகின்றவர்கள் என்று  நம்பப்படுகிறது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி சோனு என்ற  கிரிக்கட் போட்டி நிர்ணயக்காரர், தமது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம், மாதம்  ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வருமானமாக பெறுவதாக தெரியவந்துள்ளது. 

இவருக்கு ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,தென்னாப்ரிக்கா, சவூதி அரேபியா மற்றும்  இந்தியா ஆகிய இடங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக  தகவ்ல்கள் கூறுகின்றன. 

நன்றி : விகடன்.காம்

தஞ்சை குமணன்

Friday 18 May 2012

அ.தி.மு.க. ஆதரவுடன்தான் மதுரை ஆதீனமானேன்:நித்யானந்தா


அ.தி.மு.க. ஆதரவுடன்தான் தாம் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே கச்சனத்தில் உள்ள கோவிலுக்கு இன்று தரிசனம் செய்ய வந்த நித்தியானந்தா,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ”அ.தி.மு.க.வின் ஆதரவுடன்தான் நான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன்.இந்த அரசு எங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாலேயே எங்களால் பல இடங்களுக்கு சென்றுவர முடிகிறது.

காஞ்சி சங்கராச்சிரியார் ஜெயேந்திரர் எனக்கு எதிராக இனி குற்றச்சாட்டு எழுப்பினால்,அவர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். ஆதீனம் இடத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களை ஓடஓட விரட்டுவேன்”என்று கூறினார்.

நல்ல உலகமடா. விட்டா இவரு அறநிலையத்துறை மந்திரி கூட ஆவாரு

நன்றி : விகடன்.காம்

தஞ்சை குமணன்


Sunday 22 April 2012

என்னதான் பார்த்தோமோ!


உதயங்கள் பல பார்த்திருப்போம்

நிகழ்வுகள் பல பார்த்திருப்போம்

கடமைகள் பல பார்த்திருப்போம்

வம்சங்கள் பல பார்த்திருப்போம்

மிருகங்க‌ள் பல பார்த்திருப்போம்

மனிதர்கள் பலர் பார்த்திருப்போம்

செய்கைகள் பல பார்த்திருப்போம்

குணங்கள் பல பார்த்திருப்போம்

சட்டங்கள் பல பார்த்திருப்போம்

வினாக்கள் பல பார்த்திருப்போம்

விடுதிகள் பல பார்த்திருப்போம்

திருத்தலங்கள் பல பார்த்திருப்போம்

பொய்மைகள் பல பார்த்திருப்போம்

வக்கிரங்கள் பல பார்த்திருப்போம்

பாசங்கள் பல பார்த்திருப்போம்

ஊர்திகள் பல பார்த்திருப்போம்

பக்திகள் பல பார்த்திருப்போம்

நட்புகள் பல பார்த்திருப்போம்

காதலயும் பலரால் பார்த்திருப்போம்

நயவஞ்சகங்களையும் பல பார்த்திருப்போம்

தந்திரங்கள் பல பார்த்திருப்போம்

அதிசயங்கள் பல பார்த்திருப்போம்

இளவுகள் பல பார்த்திருப்போம்

சடங்குகள் பல பார்த்திருப்போம்

பந்திகள் பல பார்த்திருப்போம்

பத்திகள் பல பார்த்திருப்போம்

புரட்சிகள் பல பார்த்திருப்போம்

சதிவேலைகள் பல பார்த்திருப்போம்

குரோதங்கள் பல பார்த்திருப்போம்

பயிற்றுருவித்தல் பல பார்த்திருப்போம்

பயிலுதல் பல பார்த்திருப்போம்

உபசாரங்கள் பல பார்த்திருப்போம்

துரோகங்க‌ள் பல பார்த்திருப்போம்

இனி நடப்பவற்றையும் பார்க்க இருக்கும்

தஞ்சை குமணன்

Wednesday 28 March 2012

பூஜா முதல் அமலா வரை - ஆர்யா


ஆர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், படம் பற்றிய தகவல்களைவிட அதிகமாக,  அப்பட நாயகிக்கும் ஆர்யாவிற்கும் காதல் என  கிசுகிசுக்கள் வரத் தொடங்கி விடும்.

' வேட்டை' படத்தில் ஆர்யாவிற்கு நாயகியாக நடித்த அமலாவிற்கும் இவரும் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஆர்யா தன் வீட்டில் தனது நண்பர்களுக்கும்  CCLல் போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கும் விருந்து அளித்தார்.

அவ்விருந்தில் அமலா கலந்து கொள்ளவில்லை. பிரபுதேவா பிரிவிற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த நயன் இதில் கலந்து கொண்டார்.

உடனே அமலாபாலை உதறிவிட்டு நயனுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் ஆர்யா என கோலிவுட் கிசுகிசுத்தது.  இதற்கு அமலா " ஆர்யாவுக்கும் எனக்கும் நட்பு தொடர்கிறது. அவரோடு நான் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆர்யா வீட்டில் விருந்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதனால்தான் அதில் பங்கேற்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது " என்னுடன் நடிக்கும் நாயகிகள் அனைவருடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. பூஜா தொடங்கி இப்போது அமலா பால் வரை என்னை இணைத்து கிசுகிசு வருகிறது.

எனக்கு அனைவருமே நண்பர்கள் தான். நான் மிகவும் ஜாலியான் ஆள். அனைவருமே எனக்கு ஒன்று தான். ஒருவர் மட்டும் மிகவும் நெருக்கம் என்று என்னால் தனித்தனியாக பிரிக்க முடியாது. 

என்னுடைய திருமணம் அனைவருக்கும் தெரிந்து தான் நடக்கும். " என்று தெரிவித்து இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : "பட், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு! "

தஞ்சை குமணன்

நன்றி விகடன் டாட் காம்

Monday 26 March 2012

தனது மகள் ஐஸ்வர்யா பற்றி ரஜினி பெருமிதம்


தமிழ்ப்பட ரசிகர்கள் தற்போது ஒரு படத்தினை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றால் அப்படம் 3 ஆக தான் இருக்கும்.

ரஜினி மகள் இயக்கம், கமல் மகள் நாயகி, தனுஷ் நாயகன் என ஒரு வாரிசுகளின் ஈர்ப்பு ஒருபுறம், புதுமுக இசையமைப்பாளார் அனிருத் இசைக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு மறுபுறம் என படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

மார்ச் 30ம் தேதி ' 3 ' படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகிறது. கொஞ்ச நாட்கள் கழித்து இந்தியில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

படத்தின் தெலுங்கு பதிப்புக்கு ஏற்பட்ட கடும் போட்டியில் பெரும் விலை கொடுத்து 3 படத்தினை வாங்கி இருக்கிறார் தயாரிப்பாளார் நாட்டிகுமார்.  காரணம் ஆந்திராவிலும் 'கொலவெறி' பாடலுக்கு ஏகப்பட்ட மவுஸாம்.

ரஜினி மற்றும் சரத்குமார் குடும்பம் ' கோச்சடையான்' படத்திற்காக லண்டனில் இருக்கிறார்கள். அப்போது ரஜினியிடம் ராதிகா பேசும்போது,  ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் உங்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்றாராம்.  ஐஸ்வர்யா தனுஷ் குறித்து ரஜினி மிகவும் சிலாகித்து பேசி மகிழ்ந்தாராம்.

'கொசுறு' கபாலி : " ஆமா.. தெலுங்குல 'கொலவெறி'ய எப்படி சொல்வாங்க?! "



தஞ்சை குமணன்

நன்றி விகடன் டாட் காம்

Sunday 25 March 2012

டி எம் எஸ்ஸின் 25 ஸ்பெஷல் விஷயங்கள்


டி.எம்.எஸ்... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்! 

* டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' என்றால், சௌந்தரராஜன்; 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்; 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர்'தொகு ளுவா'. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!

* டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு(எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி),முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!

* மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். 

* டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதேபாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்! 

* மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததுஇல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப்பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்,வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது! 

* டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', 'உள்ளம் உருகுதய்யா முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா', 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!

* டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!

* 'அடிமைப் பெண்' படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். 'பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது, அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா!'

* பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளி வேஷம் தேவையா இருக்கு" என்பார்.

* கவிஞர் வாலியைத் திரைஉலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நெகிழ்வார் வாலி!

* 'நீராரும் கடலுடுத்த...' என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், 'ஜன கண மன' என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!

* தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!

* 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!

* வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!

* காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!

* கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் 'சாக வேண்டும்' என்பதை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!

* நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண் டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்!

* எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!

* 'பாகப் பிரிவினை' படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன! 

* 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

* 'பட்டினத்தார்', 'அருணகிரிநாதர்' என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!

* மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை. 

* எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!
 
* தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.

தஞ்சை குமணன்

நன்றி விகடன் டாட் காம்

Friday 23 March 2012

டிவிஸ்ட்டுகள் நிறைந்த மாற்றான்


'அயன்' கூட்டணி மீண்டும் இணைந்து வெளியாக இருக்கும் படம் 'மாற்றான்'.

இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

படம் ஆரம்பிக்கும் போது வெளியான போஸ்டர் தவிர, எந்த ஒரு புகைப்படம் கூட வெளியாகாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

'ஏழாம் அறிவு' படத்திற்குப் பிறகு இப்படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி,  கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

' கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா ' என்ற விவேகா வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு மெலடி பாடலை ' மாற்றான் ' படத்திற்காக சமீபத்தில் தயார் செய்து இருக்கிறார்.

படத்தின் எடிட்டர் ஆண்டனி தனது டிவிட்டர் இணையத்தில் " மாற்றான் படம் இங்கே ஒரு டிவிஸ்ட், அங்கே ஒரு டிவிஸ்ட் என்று ஒரே டிவிஸ்ட்டா போதுபா படம்.. இடைவேளையில் சீட்டை விட்டு எந்திரிக்க மாட்டீர்கள் அங்கேயும் இருக்கிறது ஒரு டிவிஸ்ட் " என்று தெரிவித்து இருக்கிறார்,

'கொசுறு' கபாலி : " ஏன்.. தியேட்டர் சீட்ல ஃபெவிகால் தடவி வெச்சிருவாங்களோ..?! "


தஞ்சை குமணன்

நன்றி விகடன்.காம்

Wednesday 21 March 2012

எனக்கும் சித்தார்த்துக்கும் ஒண்ணுமில்லை - ஸ்ருதிஹாஸன்


கமலை போலவே பல்வேறு செய்திகளில் சமீபகாலமாக அடிபட்டு வருபவர் ஸ்ருதிஹாசன்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ' 3 ' படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், ஸ்ருதிஹாசன், அனிருத் உள்ளிட்ட அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

அப்போது பேசிய ஸ்ருதிஹாசன் " தனுஷ் உடன் என்னை இணைத்து பல்வேறு செய்திகள் வலம் வருகின்றன. அச்செய்திகள் எல்லாமே பொய். நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள், அவ்வளவு தான்.

' 3 ' படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சவாலானது. எனது திரையுலக வாழ்வின் ஆரம்பத்திலேயே  இது போன்ற பாத்திரத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. " என்று தெரிவித்தார்.

மேலும் முதலில் சித்தார்த்துடன் இணைத்து செய்திகள் வலம் வந்தது குறித்து முதன் முறையாக பேசிய  ஸ்ருதி " சித்தார்த்துக்கும் எனக்கும் இடையில் ஒன்றும் இல்லை. அவரும் என்னைப்போல் ஒரு தொழில்முறைக் கலைஞர்.. அவ்வளவு தான்" என்று தெரிவித்து இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : 3 படத்தில் இடம்பெற்றுள்ள ' கண்ணழகா..' பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பாடியிருக்கிறார் ஸ்ருதி!

தஞ்சை குமணன்

நன்றி : விகடன்

Thursday 1 March 2012

பருத்தி வீரனுக்கு எதிராக அமீர்


அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் 'பருத்திவீரன்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அமீர் மற்றும் ப்ரியாமணி இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

படத் தயாரிப்பாளர்களான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பருத்திவீரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கை வெளியிட தீர்மானித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. படத்திற்கு 'PALANTI VEERUDU' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தை மார்ச் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். இப்படத்திற்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறார் இயக்குனர் அமீர்.

இது குறித்து அமீர் " என்னுடைய பருத்தி வீரன் திரைப்படத்தை என்னுடைய அனுமதி இல்லாமல், எனக்கான ரைட்ஸ், ராயல்ட்டி தொகை எதுவுமே கொடுக்காமல் தெலுங்கில் 2ம் தேதி வெளியாக முடிவு செய்து இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

இது தெரிந்து நான் ஏற்கனவே ஜெமினி கலர் லேப்பிற்கு சென்று,  நீங்கள் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ், ரீமேக் ரைட்ஸ் நெகட்டிவ் கொடுக்க கூடாது  என்று லெட்டர் கொடுத்தேன்.

அவர்களும் அதை வாங்கி வைத்துக் கொண்டு,  நாங்கள் யாருக்கும் தரமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் ஜெமினி இருவருமே என்னை ஏமாற்றி தெலுங்கில் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

இப்போது நான் ஒரு கதை, திரைக்கதை ஆசிரியராக எனது படத்தினை என்னுடைய அனுமதி இல்லாமல் வெளியிடுகிறார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.

இப்புகாரால் 'பருத்திவீரன்' தெலுங்கு பதிப்பு படம் வெளியாகுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

தஞ்சை குமணன்

Wednesday 29 February 2012

இளையராஜாவின் இசையில் நீ தானே என் பொன் வசந்தம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார் கெளதம்.

கெளதம் மேனன் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.  முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் பாடல்களுக்கு இளையராஜாவோடு கைகோர்த்து இருக்கிறார் கெளதம் மேனன்.

காதலர் தினத்தன்று இப்படத்தின் FIRST LOOK, YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள். படத்தின் பாடல்களுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இளையராஜா.

இந்நிலையில் பாடல்கள் குறித்து கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்தில் " 'நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தமிழ்  மற்றும் தெலுங்கு பதிப்பில் இளையராஜா, யுவன், கார்த்திக் பாடியுள்ளார்கள். அதைப் பார்ப்பதே பெரும் ஆனந்தமாக இருந்தது. நேற்று இளையராஜா தன் குரலில் ஒரு பாடல் பதிவு செய்தார். " என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா இப்படத்தின்  இசைக்காக ஹாங்கேரி நாட்டிற்கு சென்று பதிவு செய்ய உள்ளார்.

தஞ்சை குமணன்

Wednesday 8 February 2012

ரஜினியின் ராணா தான் கோச்சடையானாக உருமாறுகிறதோ?


ரஜினி நடிக்க இருக்கும் படம் ' கோச்சடையான்' . தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, நாசர், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோர் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். EROS நிறுவனம் MEDIA ONE நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது.

கோச்சடையான் படம் ஆரம்பிக்கும் போதே ' ராணா ' படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு, ' கோச்சடையான் ' படம் முடிவடைந்த பின் 'ராணா' படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ' கோச்சடையான் ' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தவர்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

'ராணா' படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு,  அந்த படபூஜையில் கலந்து கொண்டார். அவரையே ' கோச்சடையான் ' நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சரத்குமார், சிநேகா இருவருமே ' ராணா ' படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். தற்போது இருவரையும் ' கோச்சடையான் ' படத்திற்கும் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

'ராணா' படத்திற்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தை அப்படியே ' கோச்சடையான் ' படத்திற்காக மாற்றி இருக்கிறார்களாம். தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் அனைவருமே ' ராணா ' படத்திற்காக கொடுக்கப்பட்ட தேதிகளை தான் ' கோச்சடையான் ' படத்திற்காக ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்கள்.

செளந்தர்யா ரஜினிகாந்த் 'சுல்தான், தி வாரியர்' என்ற ஒரு அனிமேஷன் படத்தினை நீண்ட காலமாக இயக்கி வந்தார். அப்படமும் கைவிடப்பட்டதாம். ' சுல்தான். தி வாரியர்', 'ராணா' இரு படங்களும் இணைந்ததே ' கோச்சடையான் ' என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

சுல்தானோ, ராணாவோ, கோச்சடையானோ  என்ன படமாக இருந்தாலும் ரஜினியை எப்போது திரையில் காண்பது என்று ஏங்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.


தஞ்சை குமணன்

Sunday 5 February 2012

என்னவளே






உன் கண்களை பார்த்த முதல் நிமிடம்
காதலின் முதல்வரி தொடங்கியது!

எனது உயிரின் முகவரி
பெண்னே உன்னிடம் மாறியது!

உன் முகம் பார்க்கும் ஒவ்வொரு நாளும்
எனக்கு திபாவளி!

அன்பே உன் குறல்கேட்டால் போதும்
அதுதான் இங்கே கீதாஞ்சலி!

நீ எதிர்வரும் சமயம்
புன்னகையாலே எனது முகத்தை அலங்கரிப்பேன்!

கடந்துபோனதும் கவலையினாலே
கண்கலிரண்டிலும் நீர் வடிப்பேன்!

பாடும் குயிலுக்கு
உன் பாதகொலுசுகள் பள்ளிக்கூடம்!




நீ தாவணி லாக்கரில் பூட்டியத் தங்கம்
நானே உன்னை களவாட வந்த சி்ங்கம்!

என்னை போல பயலுக்கு
கண்னே உந்தன் ஞாபகந்தான்
கவிதை எழுத தோனுச்சு!

உன் தாணித் தலைப்புக்கு
எழுதிய கவிதையை நோபல் பரிசுக்கு
அனுப்பிவைப்பேன்!




உயிரை தடவி உனது பெயரை
உதடுகளாளே உச்சரிப்பேன்!

இடைவிடாமல் உன் முகம் பார்க்க
என் இமைகளைக் கூட கத்திரிப்பேன்!

உன் காலடி சுவடுகள் கலைந்தாலும்
இந்த காதலன் இதயம் தாங்காது!

நீ ஒரு நொடி நேரம் பிரிந்தாலும்


இந்த உயிர் கடிகாரம் ஓடாது!.......

தஞ்சை குமணன்


நான் மட்டும் தானா?





பொதுத்துறை வங்கியில் நான் கணக்குகள் தணிக்கை செய்யும் பணியில் இருப்பது தாங்கள் அனைவரும் முன்பே அறிந்ததே தினம் தினம் பல பல எண்ணங்களும் கற்பனைகளும் சிந்தனைகளும் ஒன்றுக்கும் குறைச்சல் இல்லை அவற்றையும் மீறி நான் அங்கு ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். 

அலுவலகத்தில் எனது அருமை நண்பர்கள் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியே ஆகவேண்டியுள்ளது. முதலில் எனது தந்தைக்கு மிக்க நன்றி அவரால் தான் இப்பணி எனக்கு கிட்டியது அவரே எனது முதல் சிறந்த நண்பர் மற்ற அனைத்து அலுவலக நண்பர்களயும் என்னால் ஒன்று இரண்டு என்று என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை முன்கோபி மோடுமுட்டி பொன்ற சூழ்நிலை உணராத பிடிவாத குணாதிசயம் கொண்ட இவர்களுடன் நான் அங்கு அடிக்கும் கலாட்டா கூத்துக்கள் அனைத்தும் அன்றைய பணிக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எங்களது கூத்தும் கும்மாளமும் இருக்கும்.

பணியி்ன் இடையே கிடைக்கும் காபி தேனீர் மிக மிக அருமையாக இருக்கும். அதற்கென நாங்க‌ள் நேரம் ஒதுக்கி  ருசிப்போம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொவொருவர் செலவு செய்வர். எங்க‌ளது குழுவில் நாங்களே முடிவு செய்து கொள்வோம், எங்களது குழுவில் இரண்டு திரமையான ஆசிரியர்கள் வேறு எங்களுக்கு உள்ளனர் அவர்களுக்கு அருகில் நானே அதிக வயதுள்ளவன். மற்றவர்கள் என்னை விட வயதில் சிறியவர்கள். 

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அதற்காகவே நான் அவர்களுடன் விரும்பி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 

தஞ்சை குமணன். 

Saturday 4 February 2012

மான் நடிகை கொலை குற்றத்தில் கைது



ஔவையார் நூல்கள்:
2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அ·கமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

தஞ்சை குமணன்


டிஸ்கி : எல்லாரும் அவ்வையாரின் கொன்றை வேந்தன் என்ற நூல் படிச்சீங்களா, நாளை சந்திப்போமா, ஜொள்ளு விடாம படிங்க தம்பி.



Friday 3 February 2012

தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் - அழகிரி குழுவினரிடையே மோதல்


சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே திடீர் மோதல் வெடித்தது. எதிர்பாராத இந்த ரகளையால், அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடும் வேதனையடைந்தார். அறிவாலயத்தில் தி.மு.க., பொதுக்குழு நேற்று கூடியது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, கட்சிப்பிரமுகர்கள் பேச அழைக்கப்பட்டனர். விவாதம், இரண்டாவது கட்டமாக மாலை 4 மணிக்கும் தொடர்ந்தது. திண்டுக்கல் லியோனி, வழக்கறிஞர் ஜோதி மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பேசும் போது, லேசான பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் பேசும் போது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது.

பொதுக்குழுவில் கலைஞர் பேசியது : தி.மு.க.,வில் இன்று ஒரு வேதனையான பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருவரை, "இவர் இன்னாருக்கு வேண்டப்பட்டவர், இவர் அவருடைய ஆள்' என அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தலைவர் ஆரோக்கியமாக இருந்து, நம்மை எல்லாம் வழி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோல் இன்னொருவரை தலைமைப்பதவிக்கு முன்னிறுத்துவது நல்லதல்ல. ஸ்டாலின், அழகிரி மட்டும்அல்ல, தலைவரின் குடும்பமே நமது இதயம் போன்றது தான். அந்தக் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அதற்காக, தலைவர் முன்னிலையிலேயே, "இவர் தான் அடுத்த தலைவர்' என்றெல்லாம் பேசுவது உகந்ததல்ல. இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டு இருந்தபோதே, பொதுக்குழுவில் அமர்ந்திருந்த கட்சியினர், அவருக்கு எதிராகவும், "தளபதி, தளபதி' என்றும் கோஷமிடத் துவங்கினர். அதற்கு எதிர் கோஷமும் எழுந்தது. பலர், மேடையை நோக்கி முன்னேறினர். இதனால், பொதுக்குழுவில் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. "இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் கூறிய ஆறுமுகம், தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், அவரை பேச விடாமல், கட்சிக்காரர்கள் கோஷமிட்டபடி இருந்தனர். மேடையில் இருந்த முன்னணித் தலைவர்களாலும், தொண்டர்களை அமைதிப்படுத்த முடியவில்லை.

இறுதியில் எழுந்த, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் பேசியதாவது: அடுத்த தலைவர் பற்றி பேச்சு எழுந்தபோது, "இது ஒன்றும் சங்கர மடம் அல்ல, வாரிசுகளை அறிவிப்பதற்கு. இது ஜனநாயக அமைப்பு. கட்சி கூடித்தான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும்' என, ஏற்கனவே தலைவர் கூறியிருக்கிறார். நானும், தலைவரும் இல்லாத தருணங்களில் எல்லாம் கட்சியை ஸ்டாலின் தான் வழி நடத்தி வந்திருக்கிறார். இனிமேலும், அவர் தான் தலைவராக வேண்டும் என இருந்தால், அதை யார் தடுத்துவிட முடியும்? அதற்காக, இப்போதே இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசிய பிறகே, ஒருவாறு அமைதி திரும்பியது. அடுத்ததாக, கட்சித் தலைவர் கருணாநிதியின் பக்கம் மைக் வைக்கப்பட்ட போது, "அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறேன்' எனக் கூறி, மைக்கை திருப்பி விட்டு விட்டார். தொண்டர்கள் எழுந்து, பெருங்கூச்சலோடு வேண்டுகோள் விடுக்கவே, தொடர்ந்து அவர் பேசியதாவது: பெரியாரால், அண்ணாவால் பாராட்டுப் பெற்றவன் நான். தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஒருக்காலும் விரும்பியவனல்ல. பொதுக்குழுவில் விவாதத்துக்காக கொடுக்கப்பட்ட பொருள் தவிர, மற்றவை பற்றி பேசினால், அது பத்திரிகைகளுக்குத் தான் செய்தியாகப் பயன்படும். இவ்வாறு ஆரம்பித்து விரிவாக பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேச்சின் இடையில் கண் கலங்கினார். பொதுக்குழு முடிந்து, நிருபர்களைச் சந்தித்த போது, "அடுத்த தலைவர் யார் என்பதைப் பற்றி கூட்டத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை' என, திட்டவட்டமாக மறுத்தார்.

பொதுக்குழுவில் நடந்த துளிகள் 

* தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டில் இருந்து, அறிவாலயம் வரை, சாலையின் இரு புறமும் கட்சிக்கொடிகள், தோரணங்கள், குழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
* மதிய வேளையில், 2,500 பேருக்கு சைவ சமையல் தயாரித்து வழங்கப்பட்டது.
* காலையில், 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலையில், சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானமும், பொதுக்குழு விளக்கக் கூட்டங்கள் நடத்துவது பற்றிய இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
* கூட்டம் நடந்த கலைஞர் அரங்கம் அருகே வரை செல்ல, காலையில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலையில், கூட்டம் முடியும் வரை, அந்த கட்டடத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை.
* கூட்டத்தில் பேசிய பலர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், கைதட்டலும் இருந்தது.
* திண்டுக்கல் லியோனி பேசுகையில், "மொபைல் போனும், கையுமாக கட்சியினர் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, தி.மு.க., இன்னமும் ஆட்சியில் தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது' என்றார்.
* "தேர்தலில், பணக்காரர்களுக்குத் தான் சீட் கொடுக்கப்படுகிறது' என, வழக்கறிஞர் ஜோதி பேசியபோது, பெரும் ஆதரவு அலை எழுந்தது. "நீ பார்த்தியா' என ஒருவர் சத்தம் போட, அவரைக் கண்டித்தும், ஜோதியை ஆதரித்தும் பெரும் கூச்சல் ஏற்பட்டது.
* "தி.மு.க.,வுக்கு இரண்டு சேனல்கள் இருக்கின்றன. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க, கலைஞர் "டிவி'யைப் போலவே, அந்த இன்னொரு சேனலும் செயல்பட வேண்டும்' என, திருச்சி சிவா பேசியபோது எழுந்த கைதட்டல் அடங்க, நெடுநேரம் ஆனது.
* காலையில், பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கட்சியினர் பேச அழைக்கப்பட்ட உடன், மத்திய அமைச்சர் அழகிரி, அரங்கை விட்டு வெளியேறினார். மாலையில், நடந்த விவாதத்தில் அவர் பங்கேற்கவில்லை. 

நன்றி : காலை நாளிதழ் 

தஞ்சை குமணன்

Thursday 2 February 2012

பிரபல நடிகை குடிபோதையில் கைது



கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அ·கம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.



தஞ்சை குமணன்

டிஸ்கி : நானும் பலமுறை இது தான் தம்பி ஆத்திச்சூடி, நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று, இதனை கடைபிடித்தால் நாம் ஒழுக்கமுடன் வாழ்வோம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஒருத்தனும் கேட்கிற மாதிரி தெரியல, அதான் இப்படி. தலைப்ப பார்த்து ஜொள்ளு விட்டு வந்தாலும் உள்ள வந்து வாழ்க்கைக்கு நல்ல விஷயத்தை கத்துகிட்டு போங்க.



திருப்பதிக்கே லட்டா? தேமுதிகவுக்கே சவாலா? - விஜயகாந்த் கேள்வி


சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தும், முதல்வர் ஜெ.,வும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் காரசார விவாதம் நடந்தது. இதில் தேர்தலில் தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா என்று ஜெ., எழுப்பினார். யார் கூட்டணியால் யார் ஜெயித்தார் என விவாதம் நடந்தது. சபையில் அநாகரிகமாக நடந்து கொண்டதையடுத்து சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் குழு முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்த் ஆஜராகவில்லை இதனையடுத்து விஜயகாந்த் சபையில் பங்கேற்க 10 நாள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சபையில் நடந்தது என்ன என்பது குறித்தும், அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர்கள்தான் என்னை அழைத்தார்கள் என்றும் தே.மு.தி.க., அலுவலகத்தில் இன்று மதியம் விஜயகாந்த், நிருபர்களிடம் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில்: சபையில் நாங்கள் மக்கள் பிரச்சனைகளை பேசினோம். ஆனால் இதற்கு அனுமதி தரப்படவில்லை. கையை நீட்டி பேசியது தவறு என்றால் எல்லோரும் கை நீட்டி தான் பேசுகின்றனர். எங்களுடன் கூட்டணி வைத்தது அருவருப்பாக இருக்கிறதாம், ஏன் உங்களை பார்க்கவும் அருவருப்பாகத்தான் இருக்கிறது.

நாங்கள் பொறுமையாக இருக்கவில்லையா ? யாருக்கு ஏறுமுகம், இறங்கு முகம் என்று நீங்கள் சொல்லக்கூடாது மக்கள் சொல்ல வேண்டும். சபை நடவடிக்கைகள் அனைத்தையும் எடிட் செய்யாமல் ஒளிபரப்பிட தயாரா ? இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெறும் என்பது நடந்திருக்கிறது. நியாயத்தை பற்றி இவர்கள் பேசுகிறார்கள். நான் கட்சியை துவக்கி 13 முறை இடைத்தேர்தலை சந்தித்தவன். நீங்கள் தான் அச்சப்படுகிறீர்கள். நான் தலை குனிந்தாலும் மக்கள் தலைகுனிய விட மாட்டேன். எம்.ஜி.ஆர்.,காலத்தில் இருந்து கூட்டணி வைத்துதான் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். ஊர் கூடி தேர் இழுத்தோம். இதனால் கூட்டணி சேர்ந்தோம். தொண்டர்கள் என்ன விரும்புகின்றார்களோ அதன்படிதான் நாங்கள் கூட்டு வைப்போம். 5 ஆண்டுகாலம் அரசியலில் இடைத்தேர்தல் நாயகன் (அழகிரி) நிலை என்னவாச்சு ? இப்போது அழகிரி எங்கே இருக்கிறார். சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சு: சட்டம் ஒழுங்கு கெட்டு போய் குட்டி சுவராக இருக்கிறது. தேவைப்பட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். இப்போது தான் விஜயகாந்த் வந்திருக்கான் போகப்போக புரியும். ஜெயலலிதா திருந்தி விட்டார் என நிவைத்தேன் ஆனால் திருந்தவில்லை. இந்த அம்மா இன்னும் திருந்தவில்லை. ஆணவம் குறையவில்லை. மமதை போக்குடன் இருந்து வருகிறார். பழையகுருடி, கதவை திறடி என்ற கதையாகிப்போச்சு. நாளுக்கு நாள் ஒரு அமைச்சர் நீக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ராஜினாமா செய்யத்தயார் : அ.தி.மு.க,.வுடன் கூட்டணி வைத்ததற்கு ராஜிவ் முதல் வாஜ்பாய் வரை கவலைப்பட்டனர். கேவலப்பட்ட அரசுக்கு மத்தியில் எங்களை உட்கார வைத்து விட்டார்களே என நாங்கள் இவர்களுடன் கூட்டணி வைத்தமைக்கு வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். இன்றைக்கு மக்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டார்களோ அன்றைக்கு ஆட்சி சரியில்லை என்றுதான் அர்த்தம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நியாத்திற்காக போராடுவேன், என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தால் அதுநடக்காது. பேசனுமின்னா நிறைய பேச வேண்டியது வரும். பேசக்கூடாது என இருக்கிறேன். தி.மு.க.,வும்,. அ.தி,மு.க.,வும் ஒழுங்கா ஆட்சி செய்திருந்தால் நாங்கள் ஏன் கட்சியை துவக்க வேண்டும் ? நாங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட தயார், நீங்கள் தயாரா, கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து தேர்தலை சந்திக்க தயாரா? என்னுடன் கூட்டணி வைக்க ஜெ., போட்ட டூர் எல்லாம் கேன்சல் பண்ணினார்கள். என்னுடைய சவாலை ஏற்க தயாரா? மதுரைக்கே மல்லிகை பூவா ? திருநெல்வேலிக்கே அல்வாவா, திருப்பதிக்கு லட்டா, தே.மு.தி.க.,வுக்கே சவாலா என்றார். அடுத்த தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று நாங்கள் தான் ஆளும் கட்சியாக வருவோம் தொடர்ந்து கூட்டணி தர்மம் மீறிவிட்டதாக கூறப்படுகிதே என்று நிருபர்கள் கேட்டதற்கு கூட்டணி தர்மம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்றார்.

தஞ்சை குமணன்


Tuesday 31 January 2012

குயில்களின் குரலும் இசையும்



ஜானகியம்மா தேனிசை வளம் எவருக்கும் கிடைக்குமா?...

சித்ராம்மா குரலின் இனிமை இனியும் யாருக்கு கிட்டும்?...

சுசீலா அம்மா குரல் போல மருபடி கிடைக்குமா?...

லதாமங்கேஷ்கரின் குயில் குரல் இனியும் கிடைக்குமா?...

சொர்ணலதா குரலின் வனப்பு யாருக்கு வரும்?...

ஜிக்கியம்மாவின் குரலில் உள்ள குழந்தைதனம் வேறதிலும் பார்க்க முடியாது!...

அனுராதா ச்ரிராம் பாடல்கள் திரும்பத்திரும்ப கேட்க தூண்டுமே!...

எம் எஸ் விஸ்வநாதன் இசையை யாருலும் கேட்காமலிருக்க முடியாது!...

இளையராஜாவின் இசைக்கு ஈடு இணை இல்லை!...

சங்கர்கணேஷின் இசை போன்ற மதுர இசை கிடைப்பதில்லை!...

டிராஜேந்திரர் பல்திறன் இசை வேறு யாரலும் கொடுக்க முடியாது!...

ஏஆர் ரஹ்மானின் இசையை மிஞ்சுவதர்க்கு ஆளில்லை!...

ஹாரிஸ்ஜெயராஜ் இசைக்காக காத்துக்கொன்டிருக்கும் மக்கள் உண்டு!...

தரணியின் இசையை தொடர்ந்து கேட்பவர்களும் இருக்கிறார்கள்?...

சிற்பியின் இசையில் மனம் கதிகலங்கும்?...

இவ்வாறான கலைஞர்களின் படைப்புகளை திரும்பத்திரும்ப கேட்க தூண்டுகிறதே நம் மனம்!

தஞ்சை குமணன்

Saturday 28 January 2012

அமிதாப் - ரஜினி இணைந்து நடிக்கிறார்கள்


அமிதாப் பச்சன், ரஜினி இருவரும் இறுதியாக சேர்ந்து நடித்த படம் அந்தா கானூன்.  இப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் அது. ஐந்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். மறுபடியும் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தினை இயக்க இருக்கிறார் பூரி ஜெகன்நாத். 

இது குறித்து அவர் கூறியிருப்பது " சமீபத்தில் ரஜினி சாரை சந்தித்துப் பேசியபோது, நான் அமிதாப் பச்சனை வைத்து இயக்க போகும் படம் குறித்து பேசினேன். அப்புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். ரஜினி சார் அவ்வேண்டுகோளை ஏற்றுக்  கொண்டார். அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் சந்தோஷம் தெரிவித்தார். நீண்ட காலமாகவே ரஜினி சாரை இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது.  அதேசமயம், இரு பெரும் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப் நாயகனாக நடித்த 'Buddah Hoga Tera Baap' என்ற படத்தை இயக்கியவர் பூரி ஜெகன்நாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இருவரும் இணைந்து நடித்து வெளிவரும் அந்த நாளை எதிர் பார்த்து காத்திருப்போம்.

தஞ்சை குமணன்


Thursday 26 January 2012

வலையுலகில் அக்கப்போர் உருவாக்கும் பதிவர்

இந்த பதிவுலகில் தமிழ்நாடு தமிழர்கள் - ஈழத்தமிழர்கள் போர் வரப் போகிறதாம், துவக்கப் போகிறது யோசனை பெல் என்ற சாக்கடைப் பதிவராம். நேற்று முதல் தமிழ் பதிவுலகில் ஒரே ரணகளம் ஏற்படுத்தும் என்று நம்பி போட்ட போஸ்ட் தமிழ்நாட்டில் உள்ள பதிவர்களால் சீண்டப்படாமல் கிடக்கிறது. வலையுலகிலேயே ஒரு பதிவில் பின்னூட்டமிட்டால் அது நம் மேலேயே தெறிக்கும் அளவுக்கு அதில் சாக்கடை நிரம்பிக் கிடக்கிறது என்றால் அந்த யோசனை பெல் பதிவில் தான்.

நாமெல்லாம் நல்ல பதிவர்களை சந்தித்தே பழக்கப்பட்டவர்கள், இது போன்ற கழிசடையை நாம் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ்மணத்தில் ஏற்பட்ட பதிவர் - தமிழ்மணம் மோதலில் பதிவர்கள் சணடையை முடித்து விட்டு நாகரீகமாக ஒதுங்கிப் போக தமிழ்மணத்தில் நம் பதிவுலக நண்பர்கள் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டுமென்பதற்காக தரம் கெட்ட காரியங்களில் ஈடுபட்ட கருங்காலி இவர். எழவு வீட்டில் திருடும் முறையை விட கேவலமானது இவர் நடந்து கொண்ட முறை. ஈழத் தமிழர்களில் எவ்வளவோ நல்ல பதிவர்கள் நாகரீகமான முறையில் எழுதிக் கொண்டிருக்க அவர்களது அத்தனைப் பேரின் நன்மதிப்பை ஈழத்தமிழன் என்ற போர்வையில் கெடுத்துக் கொண்டிருப்பவர்.

நிருபருக்கும் - நாய் நக்ஸூக்கும், ஆபீசருக்கும் பதிவுலகில் பிரச்சனை என்றால் அவர்கள் தீர்த்துக் கொள்கிறார்கள். அதைவிடுத்து நிருபர் ஏதோ ஆதரவில்லாமல் நிற்பது போலவும் இந்த சாக்கடை வந்து காப்பாறுவதாகவும் நினைத்துக் கொண்டு நிருபரை இன்னும் சிலபடிகள் கீழிறக்க உதவி செய்து கொண்டிருக்கிறது. அனைத்து பதிவர்களும் இவரைப் பார்த்து ஒதுங்கிப் போனால் இவரைப் பார்த்து அனைவரும் பயந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் விலகிப் போனவர்களுக்குத் தான் தெரியும் சாக்கடையில் கல்லை விட்டெறிந்தால் சகதி நம் மேல் தான் படும் என்று.

எனக்கு தெரிந்த வரையில் வீடு சுரேஸ் மிக மிக கண்ணியமான ஆள். மற்றவர்களுக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். நான் இதற்கு முன் ஒரு பதிவரை பற்றி போட்டிருந்த பதிவில் கூட தனி மனித தாக்குதல் கூடாது என்று என்னை எச்சரித்தவர். அவரைக்கூட போலி பெயர்களில் வந்து கலாய்க்கும் நீங்கள் உண்மையில் கேவலமானவர் தான்.

சொந்தப் பெயரையோ தனது சொந்த புகைப்படத்தையோ தனது பதிவில் வைத்துக் கொள்ளக்கூட தைரியமில்லாத ஆள் இவர். தமிழ்நாட்டில் இதுவரை முஸ்லீம் பதிவர்களும் மற்ற தமிழ்ப்பதிவர்களும் ஒன்றாகவே பழகி வருகிறார்கள். இவர்கள் தமிழ்மணத்தில் முதலிடமும் இரண்டாமிடமும் பெற வேண்டுமென்பதற்காக கலகத்தை தூண்டியவன் இவரே. இவர் போருக்கு கூப்பிடுவாராம், அனைத்து ஈழப்பதிவர்களும் இவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போரிவார்களாம். என்னா நினைப்புங்க உங்களுக்கு. நீங்களும் உங்க கூட இரண்டு பதிவர்களும் அவர்களின் 20 புனைப்பெயர்களுடன் கூடிய ஐடியும் இருந்து வரிசையாக பின்னூட்டத்தில் கலாய்த்தால் எல்லா ஈழப்பதிவர்களும் இந்திய தமிழ்ப்பதிவர்களை எதிர்ப்பதாக அர்த்தமாகிவிடுமா. ஒரே நகைச்சுவையாக இருக்குது போங்கள்.

இத்தனைப் பதிவர்களில் உங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் ஒதுங்கிப் போகிறார்கள் என்றால் நீங்கள் எவ்வளவு அசிங்கமானவர் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.நான் சொல்லி நீங்கள் கேட்கப் போவதுமில்லை. இத்தனை நாட்களும் ஈழத்தமிழர்கள் என்றால் போராடும் வீரர்கள், நேர்மையானவர்கள் என்று எங்களை விட மிக உயர்ந்த ஸ்தானத்தில் என்னைப் போன்றவர்கள் வைத்திருந்தனர். உங்களை பதிவில் சந்தித்த பிறகு எல்லோருக்கும் அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருப்பதில் உங்கள் பங்குதான் அதிகம் என்பதை நினைத்துக்
கொள்ளுங்கள். உங்களால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த புகழ் இது தான். உங்களால் இந்த பதிவின் பின்னூட்டத்தில் வந்து கேவலமான விளக்கம் கொடுக்க முடியும், இல்லையென்றால் நாய் சேகர் புதிய புரட்சிக்காரன் மற்றும் பல பெயர்களி்ல் தரக்குறைவான பின்னூட்டங்களை இட முடியும். அவ்வளவு தானே. அது என் தரத்தை குறைக்காது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

நானெல்லாம் எந்தசண்டைக்கும் வம்புக்கும் போகாதவன், மரியாதையான நிறுவனத்தில் கெளரவமான பணியிலிருப்பவன். இது போன்ற தரம் குறைந்த பதிவு இட தூண்டுபவர் நீங்கள் தான் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சை குமணன்

Wednesday 25 January 2012

நானும் காதலித்தேன்



!<@{#$`%‍=,.}"/;'[:/]^~&*‍‍>(*)? நானும் காதலித்தேன் !<@#$`%‍=,."/;'[:/]{^~&*>}(*)?

எனது கனாவில்.............................

அவளது கண்களை.............................

அவற்றின் இயக்கங்க‌ள்
என‌க்கும் பிடிக்கும்.............................

அன்பு அனுமதி அறிவு அயர்ச்சி அலர்ஜி ஆர்பரிப்பு அமைதி அருவருப்பு அவலட்சினம் ஆக்ரோஷம்.............................

கருணை கனிவு கோபம் காதல் கசப்பு கட்டுப்பாடு குரொதம் காமம் கிண்டல் கண்டுபிடிப்பு கேலி களவு கனா.............................

பரிவு பகிர்வு பாசம் புகுத்துதல் பிடிவாதம் பேச்சு பொல்லாஙுகு பித்தம் பங்கிடு பாசாங்கு பசப்பு.............................

இரக்கம் இயக்கம் இம்சை இருக்கம் இரும்பூது இயற்கை இசைவு இயல்பு இருமாப்பு இச்சை இனிமை............................

உரக்கம் உபசரனை உபஹாரம் உபத்ரவம் உச்ச‌ரிப்பு உனர்வு உருவம் உருவகம் உத்வெகம் உர்ச்சாகம்.............................

சோர்வு சொல்வன்மை சோம்பல் சத்தியம் சாதுர்யம் சமத்துவம் சகிப்பு சண்டிதனம் சுறுசுறுப்பு.............................

தயக்கம் துணிவு தாய்மை துரோகம் தைரியம் தளர்வு திருத்தம் தோரனை.............................

 விறுவிறுப்பு வரவேற்பு விருப்பு விசும்பல் விருப்பம்.............................


அப்புறம் தான் புரிந்தது!.............................
பலரசங்க‌ளை 
அவள் இதழ் மட்டுமல்லாது
அவள் விழியும் பேச 
கற்றுகொண்டிருந்தன.............................
அதைபார்த்ததுமே 
அவளைப் போல 
மற்றவர்களையும் என்னால்
நினைக்க இயல‌வில்லை.............................
எனெனில்
அவளின் கருவிழி 
காந்த ஈர்ப்பு விசை
என்றிருந்தேன்.............................
நான் சோர்வடையும் பொது 
அவளின் விழிகள்
பேசும் பேச்சுக்கள் நான் இருக்கிரென்
என்று சொல்வது எனக்கும் புரிகிறது.............................
உடலின் வெறேந்த பாகங்களும் 
உணர்த்தாத காதலை இந்த
சின்ன‌ இரு கருவிழிகள் 
என்னை சுட்டெரிக்கிறது.............................
ஆனால் நான் என்ன பண்ணுவது 
மென்மையாக‌ எவ்வளவு தான் 
நான் வாயால் எடுத்துக் கூறினாலும்
அவள் விழிகளின் பதில் என்னை ஆச்சரியப்படுத்தும்.............................
இந்த பரந்துவிரிந்த பூஉலகில் 
அவளை எந்த மூலயில்
படைத்தானோஅந்த இறைவன் 
கொடுமைக்காரன்.............................
நான் இங்கு தனியாக 
சிரமப்பட்டு கொண்டிருக்கும்பொது
அவளும் அருகிலிருந்தால்
நான் தனிமையை உணர மாட்டென் இல்லையா.............................
எல்லாவற்றிற்கும் காலம் 
பதில் சொல்லும்
என்றென்னை தேற்றினாலும்
மனம் எனோ என்னை மிகவும் பாடாய் படுத்துகிறது.............................
அவள் விழிகளை
நான் எப்பொழுது
நேரில் பார்ப்பேன் என  
காத்துகொன்டிருக்கும்.............................
உங்கள் அன்புள்ள
தமிழ் பிரியன்
காதல் இல்லாமல் காத்துகொண்டிருக்கும்
தஞ்சை குமணன்.............................

Tuesday 24 January 2012

தனுஷ் இந்திப்படத்தில் நடிக்கிறார்!


மாதவன், கங்கனா ராவத் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம் 'TANU WEDS MANU'. ஆனந்த் ராய் இயக்கிய முதல் இந்தி படம் இது. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழிலும் இப்படத்தினை ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

ஆனந்த் ராய் இயக்க இருக்கும் அடுத்த படமான 'RAANJHNAA' நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். WHY THIS KOLAVERI பாடல் மூலம் இந்தி திரையுலகிலும் பிரபலமான தனுஷ்,  இந்தியில் நடிக்கும் முதன் படம் இது. சமீபத்தில் வாரணாசி சென்று திரும்பினார் தனுஷ். சாமி கும்பிட சென்றார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் ஆனந்த ராய் உடன் சென்று அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கும் இடங்களை பார்வையிட்டு திரும்பி இருக்கிறார்.

'ஆடுகளம்' படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அப்போதே அவரை ஒப்பந்தம் செய்து விட்டாராம் ஆனந்த் ராய். இப்படம் ஒரு அழகான காதல் கதையாம். TANU WEDS MANU படத்தினைப் போலவே இப்படத்தின் கதாபாத்திரங்களும், கதைக்களமும் டெல்லி, பஞ்சாப், சென்னை உள்ளிட்ட இடங்களை சுற்றியே இருக்குமாம்.

தனுஷ் இப்படத்திற்காக இந்தி கற்க இருக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

தஞ்சை குமணன்

நாத்து நட்ட பத்திரிக்கை நிருபர் எல்லாம் பெரிய பதிவரா



ஊர்ல இருக்கிற பதிவரெல்லாம் ஒழுங்கா அமைதியா பதிவ போட்டுகிட்டு  ஊருக்குல்ல பெரிய பதிவர்னு சொல்லிக்கிட்டு திரியிரான். ஊர்ல இருக்கிறவன் எல்லாம் பன்னி குட்டி போட்ட மாதிரி பதிவுகளை போடுறாங்கன்னு சொல்லிக்கிட்டு திரிவான். ஆனா இவன் எலிகுஞ்சு போடுற மாதிரி பதிவ போடுவான். பாரா பாராவா இருக்கும், படிச்சி பார்த்தா ஒரு எழவும் இருக்காது. பதிவுலகில் பிரிவினைகள் தலைவிரித்தாடுகிறது. பதிவுலகம் ஆரம்பித்த நாளில் இருந்து ஒற்றுமையா இருந்த தமிழ் பதிவர்களை தமிழ்நாட்டு பதிவர்கள், இலங்கைப் பதிவர்கள்னு பிரித்த முதல் எட்டப்பன் இவன் தான்.

இவன் பதிவில் வந்த ஓட்டுகளை பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஈழத்தமிழர்களின் ஓட்டாகத்தான் இருக்கும். இவனுக்கு 5 அடிப்பொடிகள். இவன் எதாவது வில்லங்க பதிவிட்டால் அதனை நான்கு பேர் கண்டித்து பின்னூட்டமிட்டால் அவர்களை வைத்து பதில் பின்னூட்டமிடும் சீப்பான ஆள் இவன். 

இவன் என்னவோ பிரபாகரன் பக்கத்துல இருந்த விடுதலைப்புலி தளபதி மாதிரி விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள், எப்படி தப்பித்தார்கள் என்று இந்த நாதேரி கூடவே இருந்த பார்த்த மாதிரி பதிவெழுதி அதில் ஹிட்ஸ் சம்பாதிக்க நினைக்கும் கீழ்த்தரமான ஆசாமி அவன். 

பத்துப்பைசாவுக்கு கூட தகுதியில்லாத பதிவை நடத்தும் முதல் கேடுகெட்ட ஆசாமி இவன் தான். இவன் பதிவைப் படித்துப் பார்த்தால் தான் தெரியும். இவன் ஒரு வெத்துவேட்டு என்று. ஈழத்தமிழர்களை உசுப்பேத்திவிட்டு குளிர்காயும் இவன், பிரபாகரனை கூட இருந்து கழுத்தறுத்து வெளியில் சென்று விடுதலைப்புலிகளின் எல்லா ரகசியங்களயும் எடுத்துச் சொல்லி விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கருணாவுக்கு நிகரானவன் இவனே.

தஞ்சை குமணன்.


Saturday 21 January 2012

சுபாஷ் சந்திர போஸின் ராணுவ நடவடிக்கைகள்


இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர். 1941 டிசம்பர் 7ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின.

பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக் கொண்டு, "இந்திய தேசிய ராணுவம்" அமைக்கப்பட்டது. போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார். ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். "இது ஆபத்தானது" என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8_ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர். எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக் கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது.

ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை, மே 6_ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது. சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார். மே 16ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய விžகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, "தேசிய மாணவர் படை"யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது. 1943 அக்டோபர் மாதம், "சுதந்திர இந்திய அரசாங்க"த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார்.

பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார். அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.

நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக "பாங்கி" தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. "இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?" என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். "ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்" என்று நேதாஜி கூறியதும், "இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்" என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார். இரண்டே வாரங்களில் "ஆசாத் ஹிந்த் பாங்க்" தொடங்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர்.

நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று! நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர். பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், "ஜான்சிராணிப்படை" என்ற பெயரில் இயங்கியது.

இதில் 1,200 பெண்கள் இருந்தனர். "தற்கொலைப்படை" ஒன்றும் இயங்கியது. இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.

"டெல்லி சலோ!" என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. "ஜான்சிராணிப்படை" பல மைல்கள் முன்னேறியது. அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. "விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்" என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதன்பிறகு நடந்தே வேறு. அது எல்லோருக்கும் தெரியும்.

தஞ்சை குமணன்