Followers

Friday 18 May 2012

அ.தி.மு.க. ஆதரவுடன்தான் மதுரை ஆதீனமானேன்:நித்யானந்தா


அ.தி.மு.க. ஆதரவுடன்தான் தாம் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே கச்சனத்தில் உள்ள கோவிலுக்கு இன்று தரிசனம் செய்ய வந்த நித்தியானந்தா,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ”அ.தி.மு.க.வின் ஆதரவுடன்தான் நான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன்.இந்த அரசு எங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாலேயே எங்களால் பல இடங்களுக்கு சென்றுவர முடிகிறது.

காஞ்சி சங்கராச்சிரியார் ஜெயேந்திரர் எனக்கு எதிராக இனி குற்றச்சாட்டு எழுப்பினால்,அவர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். ஆதீனம் இடத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களை ஓடஓட விரட்டுவேன்”என்று கூறினார்.

நல்ல உலகமடா. விட்டா இவரு அறநிலையத்துறை மந்திரி கூட ஆவாரு

நன்றி : விகடன்.காம்

தஞ்சை குமணன்


2 comments:

முத்தரசு said...

இது என்ன புது ரூட்டு

Unknown said...

ஏதோ மர்மம் இருக்குது இருக்குது
சா இராமாநுசம்

Post a Comment