வசந்தபாலன்
படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதிலும் தோத்தவனை நாயகனாக வைத்து அவர்
இயக்கிய வெயில் எனக்கு மிக
மிக நெருக்கமான படம். அந்த படத்தில்
வரும் பசுபதி கேரக்டர் கிட்டத்தட்ட
நானே தான். பிரார்த்தனா டிரைவ்
இன் தியேட்டரில் அந்த படத்தின் க்ளைமாக்ஸ்
நேரத்தில் நான் அழுத அழுகைக்கு
தியேட்டரில் அமர்ந்திருந்த எல்லோரும் என்னை ஆறுதல்படுத்தினர். காருக்குள்
கில்மா பண்ணிக்கிட்டு இருந்த ஜோடிகள் உள்பட.
அங்காடி
தெரு படமும் அப்படித்தான். நான்
படம் பார்த்து ஓவராக உணர்ச்சி வசப்பட்டு
சேர்மக்கனி ரொம்ப கஷ்டப்படுறா, நானே
கட்டிக்கிறேன்னு என் வீட்டம்மாக்கிட்டயே சொல்லி
டின்னர் சாப்பிடும் போது நடுமுதுகிலேயே மிதி
வாங்கினேன்.
மேலும் படிக்க
1 comment:
pattukkottai poittiya. phonea edu
Post a Comment