Followers

Monday 26 March 2012

தனது மகள் ஐஸ்வர்யா பற்றி ரஜினி பெருமிதம்


தமிழ்ப்பட ரசிகர்கள் தற்போது ஒரு படத்தினை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றால் அப்படம் 3 ஆக தான் இருக்கும்.

ரஜினி மகள் இயக்கம், கமல் மகள் நாயகி, தனுஷ் நாயகன் என ஒரு வாரிசுகளின் ஈர்ப்பு ஒருபுறம், புதுமுக இசையமைப்பாளார் அனிருத் இசைக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு மறுபுறம் என படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

மார்ச் 30ம் தேதி ' 3 ' படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகிறது. கொஞ்ச நாட்கள் கழித்து இந்தியில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

படத்தின் தெலுங்கு பதிப்புக்கு ஏற்பட்ட கடும் போட்டியில் பெரும் விலை கொடுத்து 3 படத்தினை வாங்கி இருக்கிறார் தயாரிப்பாளார் நாட்டிகுமார்.  காரணம் ஆந்திராவிலும் 'கொலவெறி' பாடலுக்கு ஏகப்பட்ட மவுஸாம்.

ரஜினி மற்றும் சரத்குமார் குடும்பம் ' கோச்சடையான்' படத்திற்காக லண்டனில் இருக்கிறார்கள். அப்போது ரஜினியிடம் ராதிகா பேசும்போது,  ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் உங்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்றாராம்.  ஐஸ்வர்யா தனுஷ் குறித்து ரஜினி மிகவும் சிலாகித்து பேசி மகிழ்ந்தாராம்.

'கொசுறு' கபாலி : " ஆமா.. தெலுங்குல 'கொலவெறி'ய எப்படி சொல்வாங்க?! "



தஞ்சை குமணன்

நன்றி விகடன் டாட் காம்

4 comments:

வலையுகம் said...

மகளை பற்றி தந்தை புகழலாமல் வேறு யார் புகழ்வது

karthik87 said...

வரவேற்பு

bandhu said...

Over Hype! has all the makings of a huge flop!

அக் ஷயா said...

நீங்கள் சொன்னது தந்தை புகழலாமல் வேறு யார் புகழ்வது

Post a Comment