Followers

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, 5 July 2012

சஞ்சய் தத் தமிழில் நடிக்கிறார்


ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்கள் ஆகும் வரிசையில் ரவி.கே.சந்திரன் தன்னையும் இணைத்துள்ளார்.

தனது முதல் படத்தின் நாயகனாக ஜீவாவை தேர்வு செய்து இருக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இப்படத்தினை 'கோ', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த R.S.Infotainment நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகக் இருக்கிறார் சஞ்சய் தத். ஏதோ இரண்டு அல்லது மூன்று காட்சிக்கு வருவார் என்றில்லாமல்,  படம் முழுக்க வருவது போன்ற ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்திய திரையுலகின் முக்கிய ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் என்பதால் உடனே ஒ.கே கூறி விட்டாராம் சஞ்சய் தத். 

நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


நன்றி விகடன் டாட் காம்

தஞ்சை குமணன்

Wednesday, 28 March 2012

பூஜா முதல் அமலா வரை - ஆர்யா


ஆர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், படம் பற்றிய தகவல்களைவிட அதிகமாக,  அப்பட நாயகிக்கும் ஆர்யாவிற்கும் காதல் என  கிசுகிசுக்கள் வரத் தொடங்கி விடும்.

' வேட்டை' படத்தில் ஆர்யாவிற்கு நாயகியாக நடித்த அமலாவிற்கும் இவரும் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஆர்யா தன் வீட்டில் தனது நண்பர்களுக்கும்  CCLல் போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கும் விருந்து அளித்தார்.

அவ்விருந்தில் அமலா கலந்து கொள்ளவில்லை. பிரபுதேவா பிரிவிற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த நயன் இதில் கலந்து கொண்டார்.

உடனே அமலாபாலை உதறிவிட்டு நயனுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் ஆர்யா என கோலிவுட் கிசுகிசுத்தது.  இதற்கு அமலா " ஆர்யாவுக்கும் எனக்கும் நட்பு தொடர்கிறது. அவரோடு நான் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆர்யா வீட்டில் விருந்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதனால்தான் அதில் பங்கேற்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது " என்னுடன் நடிக்கும் நாயகிகள் அனைவருடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. பூஜா தொடங்கி இப்போது அமலா பால் வரை என்னை இணைத்து கிசுகிசு வருகிறது.

எனக்கு அனைவருமே நண்பர்கள் தான். நான் மிகவும் ஜாலியான் ஆள். அனைவருமே எனக்கு ஒன்று தான். ஒருவர் மட்டும் மிகவும் நெருக்கம் என்று என்னால் தனித்தனியாக பிரிக்க முடியாது. 

என்னுடைய திருமணம் அனைவருக்கும் தெரிந்து தான் நடக்கும். " என்று தெரிவித்து இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : "பட், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு! "

தஞ்சை குமணன்

நன்றி விகடன் டாட் காம்

Sunday, 25 March 2012

டி எம் எஸ்ஸின் 25 ஸ்பெஷல் விஷயங்கள்


டி.எம்.எஸ்... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்! 

* டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' என்றால், சௌந்தரராஜன்; 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்; 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர்'தொகு ளுவா'. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!

* டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு(எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி),முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!

* மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். 

* டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதேபாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்! 

* மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததுஇல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப்பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்,வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது! 

* டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', 'உள்ளம் உருகுதய்யா முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா', 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!

* டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!

* 'அடிமைப் பெண்' படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். 'பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது, அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா!'

* பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளி வேஷம் தேவையா இருக்கு" என்பார்.

* கவிஞர் வாலியைத் திரைஉலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நெகிழ்வார் வாலி!

* 'நீராரும் கடலுடுத்த...' என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், 'ஜன கண மன' என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!

* தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!

* 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!

* வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!

* காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!

* கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் 'சாக வேண்டும்' என்பதை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!

* நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண் டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்!

* எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!

* 'பாகப் பிரிவினை' படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன! 

* 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

* 'பட்டினத்தார்', 'அருணகிரிநாதர்' என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!

* மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை. 

* எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!
 
* தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.

தஞ்சை குமணன்

நன்றி விகடன் டாட் காம்

Friday, 23 March 2012

டிவிஸ்ட்டுகள் நிறைந்த மாற்றான்


'அயன்' கூட்டணி மீண்டும் இணைந்து வெளியாக இருக்கும் படம் 'மாற்றான்'.

இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

படம் ஆரம்பிக்கும் போது வெளியான போஸ்டர் தவிர, எந்த ஒரு புகைப்படம் கூட வெளியாகாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

'ஏழாம் அறிவு' படத்திற்குப் பிறகு இப்படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி,  கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

' கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா ' என்ற விவேகா வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு மெலடி பாடலை ' மாற்றான் ' படத்திற்காக சமீபத்தில் தயார் செய்து இருக்கிறார்.

படத்தின் எடிட்டர் ஆண்டனி தனது டிவிட்டர் இணையத்தில் " மாற்றான் படம் இங்கே ஒரு டிவிஸ்ட், அங்கே ஒரு டிவிஸ்ட் என்று ஒரே டிவிஸ்ட்டா போதுபா படம்.. இடைவேளையில் சீட்டை விட்டு எந்திரிக்க மாட்டீர்கள் அங்கேயும் இருக்கிறது ஒரு டிவிஸ்ட் " என்று தெரிவித்து இருக்கிறார்,

'கொசுறு' கபாலி : " ஏன்.. தியேட்டர் சீட்ல ஃபெவிகால் தடவி வெச்சிருவாங்களோ..?! "


தஞ்சை குமணன்

நன்றி விகடன்.காம்

Wednesday, 21 March 2012

எனக்கும் சித்தார்த்துக்கும் ஒண்ணுமில்லை - ஸ்ருதிஹாஸன்


கமலை போலவே பல்வேறு செய்திகளில் சமீபகாலமாக அடிபட்டு வருபவர் ஸ்ருதிஹாசன்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ' 3 ' படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், ஸ்ருதிஹாசன், அனிருத் உள்ளிட்ட அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

அப்போது பேசிய ஸ்ருதிஹாசன் " தனுஷ் உடன் என்னை இணைத்து பல்வேறு செய்திகள் வலம் வருகின்றன. அச்செய்திகள் எல்லாமே பொய். நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள், அவ்வளவு தான்.

' 3 ' படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சவாலானது. எனது திரையுலக வாழ்வின் ஆரம்பத்திலேயே  இது போன்ற பாத்திரத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. " என்று தெரிவித்தார்.

மேலும் முதலில் சித்தார்த்துடன் இணைத்து செய்திகள் வலம் வந்தது குறித்து முதன் முறையாக பேசிய  ஸ்ருதி " சித்தார்த்துக்கும் எனக்கும் இடையில் ஒன்றும் இல்லை. அவரும் என்னைப்போல் ஒரு தொழில்முறைக் கலைஞர்.. அவ்வளவு தான்" என்று தெரிவித்து இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : 3 படத்தில் இடம்பெற்றுள்ள ' கண்ணழகா..' பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பாடியிருக்கிறார் ஸ்ருதி!

தஞ்சை குமணன்

நன்றி : விகடன்

Thursday, 1 March 2012

பருத்தி வீரனுக்கு எதிராக அமீர்


அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் 'பருத்திவீரன்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அமீர் மற்றும் ப்ரியாமணி இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

படத் தயாரிப்பாளர்களான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பருத்திவீரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கை வெளியிட தீர்மானித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. படத்திற்கு 'PALANTI VEERUDU' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தை மார்ச் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். இப்படத்திற்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறார் இயக்குனர் அமீர்.

இது குறித்து அமீர் " என்னுடைய பருத்தி வீரன் திரைப்படத்தை என்னுடைய அனுமதி இல்லாமல், எனக்கான ரைட்ஸ், ராயல்ட்டி தொகை எதுவுமே கொடுக்காமல் தெலுங்கில் 2ம் தேதி வெளியாக முடிவு செய்து இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

இது தெரிந்து நான் ஏற்கனவே ஜெமினி கலர் லேப்பிற்கு சென்று,  நீங்கள் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ், ரீமேக் ரைட்ஸ் நெகட்டிவ் கொடுக்க கூடாது  என்று லெட்டர் கொடுத்தேன்.

அவர்களும் அதை வாங்கி வைத்துக் கொண்டு,  நாங்கள் யாருக்கும் தரமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் ஜெமினி இருவருமே என்னை ஏமாற்றி தெலுங்கில் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

இப்போது நான் ஒரு கதை, திரைக்கதை ஆசிரியராக எனது படத்தினை என்னுடைய அனுமதி இல்லாமல் வெளியிடுகிறார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.

இப்புகாரால் 'பருத்திவீரன்' தெலுங்கு பதிப்பு படம் வெளியாகுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

தஞ்சை குமணன்

Wednesday, 29 February 2012

இளையராஜாவின் இசையில் நீ தானே என் பொன் வசந்தம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார் கெளதம்.

கெளதம் மேனன் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.  முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் பாடல்களுக்கு இளையராஜாவோடு கைகோர்த்து இருக்கிறார் கெளதம் மேனன்.

காதலர் தினத்தன்று இப்படத்தின் FIRST LOOK, YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள். படத்தின் பாடல்களுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இளையராஜா.

இந்நிலையில் பாடல்கள் குறித்து கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்தில் " 'நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தமிழ்  மற்றும் தெலுங்கு பதிப்பில் இளையராஜா, யுவன், கார்த்திக் பாடியுள்ளார்கள். அதைப் பார்ப்பதே பெரும் ஆனந்தமாக இருந்தது. நேற்று இளையராஜா தன் குரலில் ஒரு பாடல் பதிவு செய்தார். " என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா இப்படத்தின்  இசைக்காக ஹாங்கேரி நாட்டிற்கு சென்று பதிவு செய்ய உள்ளார்.

தஞ்சை குமணன்

Wednesday, 8 February 2012

ரஜினியின் ராணா தான் கோச்சடையானாக உருமாறுகிறதோ?


ரஜினி நடிக்க இருக்கும் படம் ' கோச்சடையான்' . தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, நாசர், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோர் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். EROS நிறுவனம் MEDIA ONE நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது.

கோச்சடையான் படம் ஆரம்பிக்கும் போதே ' ராணா ' படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு, ' கோச்சடையான் ' படம் முடிவடைந்த பின் 'ராணா' படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ' கோச்சடையான் ' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தவர்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

'ராணா' படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு,  அந்த படபூஜையில் கலந்து கொண்டார். அவரையே ' கோச்சடையான் ' நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சரத்குமார், சிநேகா இருவருமே ' ராணா ' படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். தற்போது இருவரையும் ' கோச்சடையான் ' படத்திற்கும் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

'ராணா' படத்திற்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தை அப்படியே ' கோச்சடையான் ' படத்திற்காக மாற்றி இருக்கிறார்களாம். தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் அனைவருமே ' ராணா ' படத்திற்காக கொடுக்கப்பட்ட தேதிகளை தான் ' கோச்சடையான் ' படத்திற்காக ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்கள்.

செளந்தர்யா ரஜினிகாந்த் 'சுல்தான், தி வாரியர்' என்ற ஒரு அனிமேஷன் படத்தினை நீண்ட காலமாக இயக்கி வந்தார். அப்படமும் கைவிடப்பட்டதாம். ' சுல்தான். தி வாரியர்', 'ராணா' இரு படங்களும் இணைந்ததே ' கோச்சடையான் ' என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

சுல்தானோ, ராணாவோ, கோச்சடையானோ  என்ன படமாக இருந்தாலும் ரஜினியை எப்போது திரையில் காண்பது என்று ஏங்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.


தஞ்சை குமணன்

Saturday, 4 February 2012

மான் நடிகை கொலை குற்றத்தில் கைது



ஔவையார் நூல்கள்:
2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அ·கமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

தஞ்சை குமணன்


டிஸ்கி : எல்லாரும் அவ்வையாரின் கொன்றை வேந்தன் என்ற நூல் படிச்சீங்களா, நாளை சந்திப்போமா, ஜொள்ளு விடாம படிங்க தம்பி.



Tuesday, 31 January 2012

குயில்களின் குரலும் இசையும்



ஜானகியம்மா தேனிசை வளம் எவருக்கும் கிடைக்குமா?...

சித்ராம்மா குரலின் இனிமை இனியும் யாருக்கு கிட்டும்?...

சுசீலா அம்மா குரல் போல மருபடி கிடைக்குமா?...

லதாமங்கேஷ்கரின் குயில் குரல் இனியும் கிடைக்குமா?...

சொர்ணலதா குரலின் வனப்பு யாருக்கு வரும்?...

ஜிக்கியம்மாவின் குரலில் உள்ள குழந்தைதனம் வேறதிலும் பார்க்க முடியாது!...

அனுராதா ச்ரிராம் பாடல்கள் திரும்பத்திரும்ப கேட்க தூண்டுமே!...

எம் எஸ் விஸ்வநாதன் இசையை யாருலும் கேட்காமலிருக்க முடியாது!...

இளையராஜாவின் இசைக்கு ஈடு இணை இல்லை!...

சங்கர்கணேஷின் இசை போன்ற மதுர இசை கிடைப்பதில்லை!...

டிராஜேந்திரர் பல்திறன் இசை வேறு யாரலும் கொடுக்க முடியாது!...

ஏஆர் ரஹ்மானின் இசையை மிஞ்சுவதர்க்கு ஆளில்லை!...

ஹாரிஸ்ஜெயராஜ் இசைக்காக காத்துக்கொன்டிருக்கும் மக்கள் உண்டு!...

தரணியின் இசையை தொடர்ந்து கேட்பவர்களும் இருக்கிறார்கள்?...

சிற்பியின் இசையில் மனம் கதிகலங்கும்?...

இவ்வாறான கலைஞர்களின் படைப்புகளை திரும்பத்திரும்ப கேட்க தூண்டுகிறதே நம் மனம்!

தஞ்சை குமணன்

Saturday, 28 January 2012

அமிதாப் - ரஜினி இணைந்து நடிக்கிறார்கள்


அமிதாப் பச்சன், ரஜினி இருவரும் இறுதியாக சேர்ந்து நடித்த படம் அந்தா கானூன்.  இப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் அது. ஐந்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். மறுபடியும் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தினை இயக்க இருக்கிறார் பூரி ஜெகன்நாத். 

இது குறித்து அவர் கூறியிருப்பது " சமீபத்தில் ரஜினி சாரை சந்தித்துப் பேசியபோது, நான் அமிதாப் பச்சனை வைத்து இயக்க போகும் படம் குறித்து பேசினேன். அப்புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். ரஜினி சார் அவ்வேண்டுகோளை ஏற்றுக்  கொண்டார். அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் சந்தோஷம் தெரிவித்தார். நீண்ட காலமாகவே ரஜினி சாரை இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது.  அதேசமயம், இரு பெரும் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப் நாயகனாக நடித்த 'Buddah Hoga Tera Baap' என்ற படத்தை இயக்கியவர் பூரி ஜெகன்நாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இருவரும் இணைந்து நடித்து வெளிவரும் அந்த நாளை எதிர் பார்த்து காத்திருப்போம்.

தஞ்சை குமணன்


Tuesday, 24 January 2012

தனுஷ் இந்திப்படத்தில் நடிக்கிறார்!


மாதவன், கங்கனா ராவத் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம் 'TANU WEDS MANU'. ஆனந்த் ராய் இயக்கிய முதல் இந்தி படம் இது. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழிலும் இப்படத்தினை ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

ஆனந்த் ராய் இயக்க இருக்கும் அடுத்த படமான 'RAANJHNAA' நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். WHY THIS KOLAVERI பாடல் மூலம் இந்தி திரையுலகிலும் பிரபலமான தனுஷ்,  இந்தியில் நடிக்கும் முதன் படம் இது. சமீபத்தில் வாரணாசி சென்று திரும்பினார் தனுஷ். சாமி கும்பிட சென்றார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் ஆனந்த ராய் உடன் சென்று அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கும் இடங்களை பார்வையிட்டு திரும்பி இருக்கிறார்.

'ஆடுகளம்' படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அப்போதே அவரை ஒப்பந்தம் செய்து விட்டாராம் ஆனந்த் ராய். இப்படம் ஒரு அழகான காதல் கதையாம். TANU WEDS MANU படத்தினைப் போலவே இப்படத்தின் கதாபாத்திரங்களும், கதைக்களமும் டெல்லி, பஞ்சாப், சென்னை உள்ளிட்ட இடங்களை சுற்றியே இருக்குமாம்.

தனுஷ் இப்படத்திற்காக இந்தி கற்க இருக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

தஞ்சை குமணன்

Wednesday, 11 January 2012

நண்பன் விமர்சனம்



விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இஞ்சினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார்கள். இவர்களது சக கல்லூரி மாணவன் சத்யன். கல்லூரி முதல்வர் சத்யராஜ். அவரது மகள் இலியானா. படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருகிறார் விஜய். எப்போதும் கடைசியில் வருபவர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா. சத்யராஜின் கண்டிப்பு விஜய்க்கு பிடிக்கவில்லை.  சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற்ற நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானாவுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

ஸ்ரீகாந்த், ஜீவா இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். காணாமல் போன விஜய் என்னவானார், ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் அவரை கண்டுபிடித்தார்களா என்பதே படத்தின் கதை.

விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். முந்தைய படங்களில் உள்ள பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும்,  இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார். ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும். படத்தின் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளது.

இலியானா சும்மா பார்க்கும் போதே கிக்கு ஏற்றுகிறார். என்ன வளைவு நெளிவு. அருமையான ஸ்ட்ரக்சர், ஆனால் முகம் தான் வத்தலாக முற்றிப் போய் இருக்கிறது. வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி.

தஞ்சை குமணன்

Wednesday, 28 December 2011

ராஜபாட்டை சினிமா விமர்சனம்



ஏற்கனவே தெய்வத்திருமகள் படத்தில் அடக்கி வாசித்ததால் டபுள் ஆக்ஷன் வேண்டுமென்று படம் துவங்கியதிலிருந்து அப்படியே படம் மேலே போய், போய் அப்படியே தியேட்டர் கூரையை பிச்சிக்கிட்டு வெளியே போய் விட்டது. விக்ரமுக்கு இந்த படத்தின் தோல்வி அவரது கேரியரை பாதிக்காது என்பதால் அவரது ஹீரோயிச ஆசையை தீர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாவம் சுசீந்தரன். என்னடா ஒவர் பில்டப்பா இருக்கு கதைக்கு வருவோம் என்கிறீர்களா. ஒகே.

தமிழகமெங்கும் நில அபகரிப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் பின்புலமுள்ள கும்பல் விஸ்வநாத் அவர்களிடமிருந்து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறது. விஸ்வநாத் விக்ரமிடம் தஞ்சமடைகிறார். பாதுகாப்பு கொடுக்கும் விக்ரமிடமிருந்து அசந்த நேரத்தில் கோயிலில் வைத்து நிலம் விஸ்வநாத்திற்கே தெரியாமல் கைமாறுகிறது. அதன் பிறகு விக்ரம் ஆக்சன் அவதாரமெடுத்து வில்லன்களிடமிருந்து நிலங்களை மீட்கிறார்.

அவ்வளவு தான் படத்தின் கதையை பற்றி சொல்ல முடியும். இந்த கதை 80களில் 100 படமாக வந்திருக்கும். 90களில் 50 படங்களும் அதன் பிறகு சில வருடங்களுக்கு ஒரு படமும் வந்து கொண்டிருந்தது. கடைசியாக ஜீவா நடித்த பொறி என்று நினைக்கிறேன். அதன் பிறகு அதே கதையை பட்டி டிங்கரிங் பார்த்து ராஜபாட்டையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

விக்ரம் அவரது நடிப்பை பற்றி நாம் சொல்வது ஓவர். அவருக்கு அபிஷேக்பச்சனை விட நன்றாக நடிக்கத் தெரியும் என்பது ராவணன் படத்தை தமிழ், இந்தி இரண்டு வெர்ஷனும் பார்த்தவர்களுக்கு தெரியும். அதனால் அது வேண்டாம். அவரது விதவிதமாக கெட்டப் ஆசைகளை தீர்த்து விட்டிருக்கிறார். படத்தில் ஒவ்வொரு காட்சி எடுக்கும் போதும் ஒரு ஜிம்முடன் பயணித்திருப்பார்கள் போல .ஒவ்வொரு காட்சியிலும் அப்பொழுது தான் பெஞ்ச் பிரஸ் எடுத்து நிமிர்ந்தவர் போல விடைப்பாக தெரிகிறார்.

ஹீரோயின் தீக்ஷா சேத். வேஸ்ட் இரண்டு பாட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். ஆளும் ம்ஹூம், நாக்கு நச்சலேது. ஏதோ ஒக்கடி தக்குவா உந்தி. விஸ்வநாத் நடிகனாக தமிழில் சொல்லும்படியாக நிறைய காட்சிகளில் வருகிறார். காமெடி செய்கிறார். நல்ல பெர்பார்மன்ஸ்.

தம்பி ராமையாவுக்கு காமெடி ரோல் கொடுத்து விட்டிருக்கிறார்கள். முயற்சிக்கிறார். சிரிப்பு தான் வரவில்லை. அந்த அக்கா அதன் பதின்வயதில் எப்படியிருக்கும் நினைக்கும்போதே டென்சனாகிறது (உணர்ச்சியை அடக்குடா செந்திலு.. இப்ப அது ஆன்ட்டி) இப்பொழுதும் பாதி டென்சன் வரவைக்கிறார்.

இந்தபடத்துல வில்லாதி வில்லன் அப்படின்னு ஒரு பாட்டு வருது. அதுல ஒரு பொண்ணு டான்ஸ் ஆடுச்சு. இதை எங்கேயோ பார்த்த மாதிரியிருக்கேன்னு ரொம்ப நேரம் யோசிச்சேன், அதுலேயே பாதி பாட்டு போயிருச்சி. அப்பத்தான் என் மூளையில் ஒரு மின்னல் (செம மூளைப்பா எனக்கு...!) அந்த பொண்டு தெலுங்குல மரியாதராமண்ணா அப்படிங்கிற சூப்பர்ஹிட் படத்துல ஹீரோயின். அந்த படத்துல ஹீரோ சுனில், இயக்குனர் இதுவரை தோல்வியே பார்க்காத S.S. ராஜமெளலி. அப்படிப்பட்ட அந்த படத்துல மிக மரியாதையான கேரக்டருல நடிச்ச அந்த பொண்ணு இந்த படத்துடல அயிட்டம் சாங் ஆடுது. அதுக்கு என்ன பணத்தேவையோ, அந்த ஹோம்லியான லுக்ல பார்த்து ரசிச்ச எனக்குதான் மனசு கஷ்டமாயிருச்சி. நல்ல பொண்ணுங்களையெல்லாம் உரிச்ச கோழியாக்கிறானுங்கப்பா.

அக்காவாக வருவரின் பினாமியாக இருக்கிறார் ஒரு வாப்பா என்னும் முஸ்லீம். அவருக்காக நிலங்களை வாங்கி பதுக்கி வைக்கிறார். அவர் காவல்துறையினிடம் மாட்டிக் கொள்கிறார். அவர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்ய ஆள்பவர்களால் தூண்டப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சம்பவத்தை நீங்கள் திமுக குடும்பத்துடனும் சாதிக் பாட்சாவுடனும் ஒப்பிட்டு கொண்டால் நான் பொறுப்பல்ல.

சுசீந்திரன் அது என்னவோ தெரியவில்லை. அவரது நாலு படத்தையும் முதல் நாள் முதல்காட்சி பார்த்து விடுகிறேன். ஆனால் மூன்று படங்களில் படம் முடிந்து வரும் போது நல்ல படத்தை பார்த்தோம் என்ற பெருமிதம் இருக்கும், ஆனால் இந்த படத்தில் அது இல்லை.

 விமர்சனம் ஓவர்,
தஞ்சை குமணன்

செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

தமிழ்த்திரை உலகில் புகழ் மிக்க நட்சத்திரமாகத் திகழ்ந்த சந்தியா _ ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக, 1948 பிப்ரவரி 24_ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகரில் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூர் மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூர் பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12_வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசைக் கருவிகளை மீட்டவும், இனிமையாகப் பாடவும் தேர்ச்சி பெற்றார். 1964_ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய் மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு, திரை உலகப் பிரவேசம் நடந்தது.
ஜெயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார். தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965_ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம். அந்தப் படத்தயாரிப்பின்போதே பி.ஆர்.பந்துலுவின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன.

தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.   "வெண்ணிற ஆடை" படம் வெளிவருவதற்கு முன், ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த "எபிசில்" (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்தப் படத்தைப் பார்த்தவர்கள், "இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்!" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள். முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971_ம் ஆண்டு காலமானார்.

தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் `வேதா') ஜெயலலிதாவின் 100_வது படமான "திருமாங்கல்யம்" 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார். 1980_ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.
சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982_ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார். ஜெயலலிதாவை, 1984_ல் ராஜ்யசபா உறுப்பினராக்கி, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் ஆக்கினார். ராஜ்ய சபையில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள், அவருக்குப் புகழ் தேடித்தந்தன. குறிப்பாக, ஆங்கிலத்தில் அவர் பெற்றிருந்த புலமை அனைவரையும் கவர்ந்தது.

எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டது. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஜானகி அம்மாள் முதல்_அமைச்சர் ஆனபோதிலும், தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். எனவே, ஜானகி அம்மாள் மந்திரிசபை 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. அதன்பின், ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார். ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று முதல்_அமைச்சர் ஆனார். அதன் பிறகு நடந்தது எல்லாம் இந்த தலைமுறையினருக்கு தெரியும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

தஞ்சை குமணன்

Sunday, 11 December 2011

ஆதாமின்டே மகன் அபு விமர்சனம்



அன்பார்ந்த வலைப்பூநண்பர்களுக்கு,

மிகச்சமீபத்தில் தான் ஆதாமின்டே மகன் அபு படத்தை பார்க்க நேர்ந்தது. மலையாளியை பிடிக்காமல் இருந்தாலும் இந்த படம் பிடிக்கிறது. முதல் முறையாக முயற்சிக்கின்றேன். படித்துப் பார்த்து குறையிருந்தால் சுட்டிக்காட்டவும்.


ஹஜ்ஜுக்கு பயணிக்க நினைக்கும் ஒரு முதியவனின் கதை.அத்தரும் ஜவ்வாதும் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சலீம் அவர் மனைவியுடன் ஹஜ் பயணத்துக்கு தயார் செய்வதை சித்தரிக்கும் படம்.மது அம்பாட்டின் ஒளி ஓவியத்தில் நம்மையும் கேரளப்பசுமையை ரசிக்கவைத்துக்கொண்டே பயணத்தை எந்தவித வியாபார நோக்கமில்லாமல் வெகு இயல்பாக சித்தரிக்கிறார் இயக்குனர்.


பாங்கு ஒலி கேட்டு நான்கு மணிக்கு எழுந்து ஸுபஹு’வுக்கு செல்ல கிணற்றடியில் குளித்துவிட்டு தொம்தொமென்று மரப்படிகளில் ஏறும் தம்பி அந்தோணிக்கு வாய்க்காதது , “இண்ணல ராத்திரி முழுவன் வயிற்றிலெ வாயு கிடன்னு களிக்குகயாணு” என்று காரும் வீடும் வைத்திருக்கும் டி.எஸ்.ராஜு [ ஹாஜி] க்கு கிடைக்காத வாய்ப்பு, அத்தனை பெரிய ட்ராவல்ஸ்ஸில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் முகேஷுக்கு கிடைக்காத வாய்ப்பு , வெறுமனே அத்தரும்,நறுமணப்பொருட்களும் விற்கும் நம் சலீமிற்கு [ அபு ] ஹஜ் செல்ல வாய்ப்புக்கிடைக்கும்போது நமக்கு உள்ளுர சந்தோஷம் ஏற்படுவது இயற்கை.”நாம நினைக்கும் போது கடவுளைக் காணச்செல்ல இயலாது, அது அவனாக நினைக்கும்போது மட்டுமே நடக்கும்” என்பது இதிலும் மெய்யாகிறது.


வெகு நாட்களாக வளர்த்து வந்த பலாமரமத்தை கலாபவன் மணியிடம் [ஜான்சன்] விற்கச்செல்வதும்,முன்பணம் வாங்கிக்கொண்டு பின் மிச்சத்தையும் வாங்கச்செல்லும்போது “மரம் எதற்கும் உதவாமல் உள்ளுக்குள் உளுத்துப் போய்விட்டது, இருந்தாலும் நான் சொன்ன விலையையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று ஜான்சன் சொல்வதும், இப்படி ஒரு சிதைந்த ஒன்றுக்கும் உதவாத மரத்தை விற்று அதில் ஹஜ்ஜுக்கு பயணிப்பதா என்று பணத்தை வாங்க மறுதலிக்கும் போது சலீமின் கதாபாத்திரம் நம்மை சிறிது அசைத்துப்பார்க்கிறது.


எங்கும் எதிலும் எப்போதாவது , அறிந்தோ அறியாமலோ தவறோ தீங்கோ இழைத்திருந்தால் பயணத்தில் தடை ஏற்படும் என உணர்ந்து, இரண்டு செண்ட் நிலத்திற்கென தன்னிடம் சண்டையிட்ட சுலைமானைச்சந்தித்து வரச் செல்வது,அங்கு சுலைமான் , இப்படி உங்களிடம் மன்னிப்பு கேட்க ஒரு சந்திப்பை ஏற்படுத்திக்கொடுக்கவே கடவுள் என்னை இன்னும் உயிருடன் விட்டு வைத்திருக்கிறான் என்று சுலைமான் சொல்வதும் அருமையான காட்சிகள்.


பயணத்தில் தடை ஏற்படுவது சகஜந்தான், அதுவும் முதியவர்களுக்கு இப்படி நேர்வது ஒன்றும் புதிதில்லை, பணப்பிரச்னையை நான் சமாளித்துக்கொள்கிறேன், நீங்க நிம்மதியா போய்ட்டு வாங்கன்னு சொல்லும் முகேஷ், மரம் உளுத்துப்போனால் என்ன விலை நிர்ணயித்தது நான் தான், அதனால ஒத்துக்கொண்ட பணத்தை குடுத்திர்றேன்னு சொல்லும் கலாபவன் மணி, பணக்குறைப்பாட்டால பயணம் நிற்க வேண்டாம்னு சொல்லி , கையில் பணத்துடன் வந்து சலீமின் வாசலில் வந்து நிற்கும் நெடுமுடி வேணு என்று எப்படி எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கின்றனர் படம் முழுக்க. ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிறது என்றால் தாமாகவே உதவிகளும் வீடு தேடி வருவது அனைவரின் வாழ்விலும் ஒரு முறையேனும் நிகழ்வது இயற்கை தானா ?


எவ்வளவோ முயற்சி செய்தாச்சு , இன்னும் கொஞ்சம்தான் கிடைக்கணும் ,அதுவும் முடிஞ்சுட்டா பயணம் சிறப்பா அமையும்னு நினைக்கும் போது ,வாசலில் கட்டியிருக்கும் பசு நானும் இருக்கேன் உங்களுக்கு உதவுவதற்கு என தன் குரலெழுப்பிக்காட்டும்போது நமக்கே இந்தப்பயணம் வெகுவாச்சாத்தியப்பட்டு விட்டது என்று நினைக்கத்தோணுகிறது. கடைசியாக பசுவில் கறந்த பாலை எடுத்துக்கொண்டு நெடுமுடி வேணு’வின் வீட்டிற்குச்சென்று அதைக்கொடுப்பதான காட்சி கலங்கடிக்கிறது.


என் ஊரில் அம்மா அதிகாலைல எழுந்து வாசல் தெளித்துகோலம் போடும்போது , கயத்துக்கடை சாகிபு [ முஸ்லீம் அவர் , கேரளாவிலருந்து தென்னங்கயிறுகள் வாங்கி மொத்த வியாபாரம் செய்பவர் ] வீட்டில வெச்சிருக்கிற பசு மாடுகள , அந்த நேரத்தில பால்பண்ணைக்கு கூட்டிட்டு போவாங்க அந்த சாகிபு வீட்டம்மா. அந்த காலை நேரத்தில பசுவினைக் காணுவது என்பது அம்மாவுக்கு லக்ஷ்மியவே பார்த்த மாதிரி,அத அவங்க ரெண்டு பேரோட கண்கள்லயும் அந்த மகிழ்ச்சிய நான் பார்த்திருக்கேன் பல தடவைகள், அந்த பழைய நிகழ்வை ஞாபகப்படுத்துவது போலருந்த இந்தக்காட்சிகள் எனக்குள் குளத்திலெறிந்த கல்லைப்போல அலைகளை உருவாக்கத்தவறவில்லை.


பிறகும் பணம் குறையும் போது , ஏங்க நம்ம பையன் சத்தார் கிட்ட கேட்டா என்ன என்று ஜரீனா கேட்கும் போது , அவன் எப்படி அத சம்பாதிக்கிறானோ , அந்தமாதிரி தவறான வழியில வர்ற பணத்த வெச்சு நாம பயணிக்கணும்னு அவசியமில்லை என்று மறுப்பதும் நமக்குள் ஒரு சிலிர்ப்பை உருவாக்கத்தவறவில்லை.


Passport வாங்கிக்கொள்ள PostOffice திறக்குமுன்னரே அதன் வாயிலில் போய்க்கிடப்பது,”ச்செல நேரத்துக்கு நிங்களுக்கு சிறிய குட்டிகளுடே சுபாவா(ம்) “ [ சில நேரங்களில் நீங்கள் சின்னப்பிள்ளைகள் போலத்தான் நடந்துக்குவீங்க] என்று ஜரீனா சலீமை செல்லமாகக்கடிந்து கொள்வது ,பிறகு வாங்கிக்கொண்டு வந்த Passport-ஐ தன் மனைவி கையால் தொட்டுவிட்டால் அழுக்காகிவிடும் என்று சலீம் தன் கையில் வைத்துக்கொண்டே காண்பிப்பது,இருந்தாலும் பாஸ்போர்ட் போட்டோவில நீ அழகாத்தானிருக்கிற என்று சொல்லும் காட்சிகளில் தம்பதியினரின் நெருக்கம் ஒரு கவிதை.


“இறந்துபோன என்னோட அம்மா,அப்பாவ ஹஜ்ஜுக்கு அனுப்பறதா நினைச்சுக்கிறேன்னு சொல்ற பிள்ளைக்கு ,நூறு முறை ஹஜ் சென்று வந்ததற்கான புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி பணத்தினை வாங்க மறுப்பதும், உறவினர் தவிர வேறு யாரிடமும் பணம் வாங்குவதோ, கடனாகப்பெற்று செல்வதோ ஆகாது என்று சொல்லி பணத்தை வாங்க மறுப்பதும் , உளுத்த மரத்தினை விற்று உனது நம்பிக்கையை தகர்த்து அதில் கிடைக்கும் பணம் வேண்டாம் என்று அந்தப்பணத்தினையும் மறுப்பதும், அவ்வளவு காசிருந்தா நாங்க குடிச்ச டீக்கும் சேர்த்து குடுக்கவேண்டியது தானே என்று ஏளனம் பேசுபவர்களுக்கும் சேர்த்து காசு கொடுப்பதும்” என சலீம் அத்தனை காட்சிகளிலும் மிளிர்கிறார்.


கடைசிக்காட்சிகளில் பஸ்ஸில் பயணிக்கையில் ,சலீம் மயங்கி விழுவது போன்ற காட்சி படம் அங்கேயே முடிந்து விட்டது போன்ற உணர்வைத்தருவதைத்தவிர்க்க இயலவில்லை.மத நல்லிணக்கத்தைக் காட்டிவிடவேண்டும் என்று நெடுமுடி வேணுவை ஹிந்துவாகவும், கலாபவன் மணியை கிறீஸ்ட்டீனாகவும் வைத்து அவர்களை சலீமின் பயணத்திற்கு உதவுவது போலக்காட்டியிருப்பது கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.


இஸ்லாமியப்படத்திற்கான பின்னணி இசைக்கென வழக்கமாக நாம் இதுநாள் வரை கேட்டுக்கொண்டிருக்கும் ஷெனாய், மற்றும், மாண்டலின் போன்ற கருவிகளைக்கொண்ட இசையையும் , கூடவே நமது மண்ணின் வாத்தியங்களான புல்லாங்குழல் மற்றும் தபேலாவையும் கூடவே பயன்படுத்தியிருப்பது சிறப்பு. ஐசக் தாமஸ் கோட்டுக்காப்பள்ளி , இவர் பாலுமகேந்திரா’வின் ‘கதை நேரம்’ என்ற பல பிரபல எழுத்தாளர்களின் கதைகள் கொண்ட தொலைக்காட்சித் தொடருக்கான பின்னணி இசையை அளித்தவர். சலீம் பணத்தை எண்ணும் காட்சிகளில் சந்தூர், புல்லாங்குழல் மற்றும் மற்றும் தபேலா கொண்டு இவர் இசைத்திருக்கும் சிறிய இசைக்கோவை ஒரு மகிழ்வை சலீமோடு சேர்த்து நமக்குள்ளும் உண்டாக்கத் தவறவில்லை.


குறைகள் என்று சொல்ல வேண்டுமென்றால் பாடல்கள் வருவதை சொல்லலாம். பாடல் காட்சிகளினூடே படத்தை நகர்த்தி செல்வது என்பது சாதாரண வணிகப்படங்களை ஞாபகப்படுத்துகிறது. Passport Verification க்காக Police Station செல்லும்போது , அந்த இன்ஸ்பெக்டர், சலீமை “ஆதாமிண்டே மகன் அபு “ என்று படத்தின் பெயரை சொல்லி அழைப்பது, அதுவும் இரண்டு முறை சொல்வது, பிறகு அதையே சலீமும் சொல்லிக்கொண்டே அவருக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற காட்சிகளில் சாதாரண வணிகப்படங்களின் சாயல் தெரிவது என்பன போன்றவைகளை குறைகளாகச்சொல்லலாம். எதிர்த்தவர்கள் பின் திருந்தி உதவுவதும், நண்பர்கள் அனைவரும் சலீமிற்கு உதவுவதற்கெனவே இருப்பது போலவும் காட்டியிருப்பது , போன்ற காட்சிகள் , இந்தப்படத்தை வெளிநாட்டுப்பட வரிசை’க்கான ஆஸ்கார் விருதைப்பெற வரிசையில் சற்றுப் பின்னே தள்ளும் என்பதில் ஐயமில்லை.


எதிர்ப்பாராத இடங்களிலிருந்தும் , எதிர்பார்த்த இடங்களிலிருந்தும் உதவி கிடைத்தும்,பயணம் ஏன் தடைப்படுகிறது என்று யோசித்து இன்னமும் ஏதோ குறை இருப்பதை என்பதை எண்ணி , ஒரு உயிர் வாழும் ஜீவனை வெட்டி வீழ்த்தி அதை விற்ற காசில் பயணிக்க நினைப்பதே குறை என்றுணர்ந்து மரக்கன்றை ஊன்றி நீருற்றுவதில் அடுத்த முறை பயணிப்பதற்கான நம்பிக்கை சலீமிற்கும் ,நமக்கும் உறுதிப்படுத்தப்படுகிறது.


தஞ்சை குமணன்